ஆப்நகரம்

திருவண்ணாமலையில் நிர்வாணமாக வழிபாடு நடத்திய ஆந்திரா சாமியார்

திருவண்ணாமலை கிரிவல பாதையில் ஆந்திர சாமியார் ஒருவர் நிர்வாணமாக வழிபாடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் அந்த வழிபாட்டை தடுத்து நிறுத்தினர்.

Samayam Tamil 30 Jan 2019, 8:20 pm
திருவண்ணாமலை கிரிவல பாதையில் ஆந்திர சாமியார் ஒருவர் நிர்வாணமாக வழிபாடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் அந்த வழிபாட்டை தடுத்து நிறுத்தினர்.
Samayam Tamil கிரிவலப் பாதையில் நிர்வாணமாக வேள்வி நடத்திய ஆந்திரா சாமியார்


ஆந்திராவை சேர்ந்த சூர்ய பிரகாஷனந்த சாமியார், எப்போதும் நிர்வாண நிலையிலேயே இருப்பவர். சமீபத்தில் திருவண்ணாமலைக்கு வந்த அவர், ஜன. 23ம் தேதி முதல் பிப். 10ம் தேதி வரை கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்கங்களுக்கு பசுபத வேள்வி நடத்த முடிவெடுத்தார்.

அதன்படி கிரிவலப் பாதையில் உள்ள ஆந்திர ஆசிரமத்தின் ஒரு பகுதியில் நிர்வாண நிலையில் வேள்வி நடத்தி வந்துள்ளார். இந்த வழிபாட்டில் ஆண், பெண் இருபாலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இதுதொடர்பாக தகவல் அறிந்த மாவட்ட கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி தலைமையிலான வருவாய்த் துறை மற்றும் காவலர்கள் நேரில் சென்று சாமியாரிடம் விசாரணை நடத்தினர். இதனால் காவலர் மற்றும் சாமியார் தரப்பினரிடையே வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

அடுத்த செய்தி