ஆப்நகரம்

பொங்கல் பரிசு தடையை உடனே அமல்படுத்த வேண்டும்: வழக்கு தொடர்ந்தவர் வலியுறுத்தல்

பொங்கல் பரிசுடன் 1000 ரூபாய் வழங்குவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை உடனடியாக தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர் டேனியல் ஜேசுதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Samayam Tamil 9 Jan 2019, 8:46 pm
பொங்கல் பரிசுடன் 1000 ரூபாய் வழங்குவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம்வழங்கியுள்ள தீர்ப்பை உடனடியாக தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர் டேனியல் ஜேசுதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Samayam Tamil vlcsnap-2019-01-09-20h35m00s506


பொங்கல் பரிசாக நியாயவிலை கடைகளில் அனைத்து ரேசன் கார்டு வைத்து இருப்பவர்களுக்கும் பச்சரிசி, சர்க்கரை,முந்திரி,ஏலக்காய் ,கரும்பு ஆகியவற்றுடன் 1000 ரூபாய் பணமும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்து, கடந்த சனிக்கிழமை முதல் வழங்கப்பட்டும் வருகின்றது. அனைத்து ரேசன்கார்டு வைத்திருப்பவர்களுக்கும் நியாயவிலை கடைகளில் பொங்கல் பரிசுடன் 1000 ரூபாய் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையை சேர்ந்த சமூக ஆர்வலர் டேனியல் ஜேசுதாஸ் என்பவர் வழக்கு தொடுத்து இருந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் வறுமை கோட்டிற்கு மேல் இருப்பவர்களுக்கு பொங்கல் பரிசாக பணம் கொடுக்க தடை விதித்துள்ளது.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த கோவையை சேர்ந்த சமூக ஆர்வலர் டேனியல் ஜேசுதாஸ் , கோவை நீதிமன்ற வளாகத்தில் பேட்டியளித்தார்.அப்போதுஉயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது வரவேற்கத்தக்கது என தெரிவித்தார்.மேலும்

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்க நிதி இல்லாத நிலையில் வறுமை கோட்டிற்கு மேல் இருப்பவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவது சரியல்ல என்பதால் வழக்குதொடரப்பட்டது எனவும் வசதி உள்ளவர்களுக்கும் 1000 ரூபாய் வழங்குவது என்பது எற்புடையது அல்ல எனவும் தெரிவித்தார். தமிழக அரசு கடன்களை அதிகரிப்பதை விடுத்து கடன் சுமையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்த அவர், பொங்கல் பரிசு விவகாரத்தில் அரசின் கொள்கை முடிவை எதிர்ப்பது தங்கள் நோக்கமல்ல எனவும், வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கு மட்டும் கொடுக்க வேண்டும் என்பதே தங்களது நோக்கம் எனவும் தெரிவித்தார்.

நீதிமன்ற தீர்ப்பை உடனடியாக தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் எனவும் சமூக ஆர்வலர் டேனியல் ஜேசுதாஸ் தெரிவித்தார்.தான் அரசியல் கட்சியில் இருந்தாலும் அதற்கும் இந்த வழக்கு தொடரப்பட்டதற்கும் எந்த தொடர்புமில்லை எனவும் டேனியல் ஜேசுதாஸ் தெரிவித்தார்.

அடுத்த செய்தி