ஆப்நகரம்

tn school open: கட்டணம் கேட்டு நிர்பந்திக்கும் பள்ளிகள் - அமைச்சர் சொல்வது என்ன?

பள்ளிக் கட்டணத்தை கட்ட நிர்பந்திக்க கூடாது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 19 Nov 2020, 12:56 pm
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் ஆன்லைன் மூலமாக மட்டுமே பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன. இதனால் மாணவர்கள் பாடங்களை புரிந்துகொள்வதில் சிரமங்களைச் சந்திக்கின்றனர். அத்துடன் பாடம் கற்றுத் தரப்படும் நேரமும் மிகக் குறைவானதாகவே உள்ளது. ஆனால் முழு கட்டணத்தையும் வசூலிக்க பள்ளிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
Samayam Tamil tn school open


கொரோனா பொது முடக்கம் காரணமாக மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வரும் நிலையில் பள்ளிக் கட்டணத்தை முழுமையாக கட்ட முடுயாத சூழல் ஏற்பட்டது. இதனால் பகுதி பகுதியாக 75 சதவீத கட்டணத்தை மட்டும் வசூலிக்க உத்தரவிடப்பட்டது.

செப்டம்பர் 30 வரை 40 சதவீதம் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் எனக் கூறப்பட்ட நிலையில் மீதமுள்ள 35 சதவீதம் கட்டணத்தை வசூலிக்க தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பல பள்ளிகள் ஆரம்பத்திலேயே 100 சதவீதம் கட்டணத்தை வசூல் செய்ய நிர்பந்திக்கிறது.

இரவு நேர ஊரடங்கு: வெளியானது முக்கிய அறிவிப்பு!

இதுபற்றி செய்தியாளர்கள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் கேள்வி எழுப்பினால், புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்போம் என்று பதிலளித்து வந்தார். அவ்வாறு புகார் அளிக்கும் போது தங்களது பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படுமோ, பள்ளி நிர்வாகத்தால் பிரச்சினை வருமோ என்று தவிர்த்துவிடுகின்றனர்.

இந்நிலையில் இன்று ஈரோடு - நம்பியூர் கூடக்கரையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது, “கல்விக் கட்டணம் வசூல் செய்வது குறித்து பெற்றோர்களை வற்புறுத்தக் கூடாது என தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

சமாதியில் எடுத்த மூன்று சபதம்: நிறைவேற்ற தயாராகும் சசிகலா

ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெற்று வரும் நிலையில் பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடத்தப்படுவது குறித்து டிசம்பர் இறுதிக்குள் அறிவிப்பு வெளியாகும் என அமைச்சர் நேற்று தெரிவித்தார்.

அடுத்த செய்தி