தமிழ்நாட்டில் பரவலாக பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. சில மாவட்டங்களில் கன மழைப் பதிவாகி உள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், இரவு முழுவதும் மழைக் கொட்டித் தீர்த்தது. காலைப் பொழுதிலும் லேசான மழை பெய்து வருகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மழையின் தாக்கம் குறித்து இந்திய வானிலை தென் மண்டல துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் சற்று நேரத்துக்குக் கூறியதாவது:
தமிழ்நாடு மற்றும் தென் ஆந்திராவில் வளி மண்டலத்தில் ஏற்பட்டிருக்கும் மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், அரபிக் பெருங் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை பகுதிக் காரணமாகவும் அடுத்த 2 தினங்களுக்குத் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மூன்று மாவட்ட மாணவர்கள் ஜாலி மோட்: கலெக்டர்கள் விடுமுறை அறிவிப்பு!
கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரைத் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பரவலாக பெரும்பாலான இடங்களில் கனமழையும், சில இடங்களில் மிகக் கனமழையும் பதிவாகியது. அதிகபட்சமாக, தூத்துக்குடி மாவட்டம் குளித்துரையில் 14 செமி மழைப் பொழிவும், அடுத்தபடியாக பெரியநாயக்கம்பாளையத்தில் 12 செமி மழையும் பதிவாகி உள்ளது.
மூணு நாளைக்கு மூச்சு முட்ட கனமழை; குடையை மறந்திடாதீங்க மக்களே!
தென் தமிழ்நாடு மாவட்டங்களான, குமரி, நெல்லை, தூத்துக்குடியில் பரவலாக மழை பெய்யும். டெல்டா மாவட்டங்களான கடலூர், திருவண்ணாமலை, சேலம், தேனி, ஈரோடு, திண்டுக்கல், விழுப்புரம், திருப்பூர், மதுரையில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. நாளை, மேற்குத் தொடர்ச்சி மலையை ஓட்டியுள்ள பகுதிகளான கோவை, திண்டுக்கல், தேனி, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், குமரிக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலைக் காரணமாகவும், 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு மற்றும் தென் ஆந்திராவில் வளி மண்டலத்தில் ஏற்பட்டிருக்கும் மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், அரபிக் பெருங் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை பகுதிக் காரணமாகவும் அடுத்த 2 தினங்களுக்குத் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மூன்று மாவட்ட மாணவர்கள் ஜாலி மோட்: கலெக்டர்கள் விடுமுறை அறிவிப்பு!
கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரைத் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பரவலாக பெரும்பாலான இடங்களில் கனமழையும், சில இடங்களில் மிகக் கனமழையும் பதிவாகியது. அதிகபட்சமாக, தூத்துக்குடி மாவட்டம் குளித்துரையில் 14 செமி மழைப் பொழிவும், அடுத்தபடியாக பெரியநாயக்கம்பாளையத்தில் 12 செமி மழையும் பதிவாகி உள்ளது.
மூணு நாளைக்கு மூச்சு முட்ட கனமழை; குடையை மறந்திடாதீங்க மக்களே!
தென் தமிழ்நாடு மாவட்டங்களான, குமரி, நெல்லை, தூத்துக்குடியில் பரவலாக மழை பெய்யும். டெல்டா மாவட்டங்களான கடலூர், திருவண்ணாமலை, சேலம், தேனி, ஈரோடு, திண்டுக்கல், விழுப்புரம், திருப்பூர், மதுரையில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. நாளை, மேற்குத் தொடர்ச்சி மலையை ஓட்டியுள்ள பகுதிகளான கோவை, திண்டுக்கல், தேனி, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், குமரிக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலைக் காரணமாகவும், 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.