ஆப்நகரம்

சென்னையில் கனமழை கொட்டி தீர்க்காது..! வெறும் பனி மட்டும்தான்... ரிலாக்ஸ்..

சென்னையில் வழக்கத்தை விட மழை அளவு குறைந்துள்ளதாக வானிலை ஆயுவு மையம் இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 12 Dec 2019, 3:33 pm
தமிழகத்தில் கடந்த சில தினகாலக பருவமழை பரவலாக பெய்து வருகிறது. ஆனால் அதன் வீரியம் குறைந்துள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என தெரிவித்த வானிலை இயக்குனர் புவியரசன் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் லேசான மழை பெய்யுமெனவும் 14 ஆம் தேதி கடலோர பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என கூறினார்.
Samayam Tamil சென்னையில் கனமழை கொட்டி தீர்க்காது..! வெறும் பனி மட்டும்தான்... ரிலாக்ஸ்..


சென்னையை பொறுத்தவரை கடந்த அக்டோபர் முதல் பெய்துள்ள மழையில் வழக்கத்தை விட 14 சதவீதம் குறைவுதான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த வாரங்களில் சென்னையில் தொடர் மழையை கண்ட மக்கள் மிகவும் ஆட்டம் கண்டு விட்டனர்.

Chennai Weather: 5 மாவட்டங்களில் புரட்டி எடுக்கப் போகும் கனமழை - வானிலை எச்சரிக்கை!

கடந்த 2018 இல் தமிழகத்தில் பெய்த அதிகபட்ச மழை அளவை குறித்து பார்க்கலாம்.

அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கிய மழையில் அதிகபட்சமாக எண்ணூரில் 130 மி.மீ பதிவாகியது. இரண்டாவது வாரத்தில் சிவகங்கை மற்றும் திருப்பூரில் 250 மி.மீ பதிவானது.

நவம்பர் மாத தொடக்கத்தில் திருநெல்வேலி மணிமுத்தாறு பகுதியில் 286 மி.மீட்டரும், பாபநாசம் அணையில் இரண்டே நாளில் 300 மி.மீட்டர் மழையும் பதிவானது. தூத்துக்குடி சாத்தான்குளத்தில் 219 மிமீ மற்றும் குலசேகரப்பட்டினத்தில் 195 மீ.மீட்டரும் பதிவானது.

டெல்டா மாவட்டங்களை அச்சுறுத்திய கஜா புயலின் கோர தாண்டவமும் இதே நாளில்தான் நிகழ்ந்தது. சென்னையை அடுத்த காஞ்சிபுரத்தில் 180 மி.மீட்டரும் செங்கல்பட்டில் 183 மி.மீட்டரும் பதிவானது.

டிசம்பர் மாத தொடக்கத்தில் பெய்த மழையில் அதிகபட்சமாக பொன்னேரியில் 130 மி.மீட்டரும், ஊத்துக்கோட்டை மற்றும் திருவள்ளூரில் 206 மி.மீட்டரும் பதிவானது. இருப்பினும் 2018 இல் பெய்த பருவமழை 22 மி.மீட்டர் மட்டும்தான். இயல்பானது 88 மி.மீ ஆகும்.

அடுத்த செய்தி