ஆப்நகரம்

அரசுப் பள்ளிகளில் இந்த வகுப்புகள் இனி இல்லை: பள்ளிக் கல்வித்துறை முடிவு!

அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை மூட பள்ளிக் கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.

Samayam Tamil 7 Jun 2022, 12:00 pm
அங்கன்வாடிகளில் நடைபெறும் மழலையர் வகுப்புகள் முறைப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
Samayam Tamil lkg ukg


தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வந்தனர். எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் நடத்தப்படாமல் இருந்தது. எனவே 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அங்கன்வாடி மையங்களிலேயே பெற்றோர்கள் சேர்த்து வந்தனர். அங்கன்வாடி மையங்கள் சமூக நலத்துறையின் கீழ் இடம்பெறுகின்றன. அரசுப் பள்ளிகள் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கி வருகின்றன.

இந்நிலையில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதற்காக 2,381 பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வந்தன. தொடக்கக் கல்வித் துறையிலிருந்து ஆசிரியர்கள் மழலையர் வகுப்புகளுக்கு பணி மாற்றம் செய்யப்பட்டனர். இதற்கு பெற்றோர் மத்தியிலும் வரவேற்பு இருந்தது. தமிழ்நாடு முழுவதும் எல்கேஜி யுகேஜி வகுப்புகளில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சேர்ந்தனர் .

அதிமுகவில் என்ன நடக்கிறது? வெடிக்கும் பொதுச் செயலாளர் சர்ச்சை!

இந்த சூழலில் பள்ளிக் கல்வித்துறை அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் நடத்தப்படாது என அறிவித்துள்ளது. வரும் கல்வியாண்டில் இந்த இரு வகுப்புகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெறாது என தெரிவித்திருக்கிறது. மேலும் இந்த வகுப்புகளுக்காக பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களும் அவர்கள் ஏற்கனவே பணியாற்றிய ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ 10 கோடி: அள்ளிக் கொடுத்த நெல்லை பக்தர்கள்!
இது பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அரசுப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்கலாம் என்றிருந்த பெற்றோர்கள் அதிக கட்டணம் செலுத்தி எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு தனியார் பள்ளிகளை நாட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

எனவே இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அடுத்த செய்தி