ஆப்நகரம்

தமிழகத்தில் 20ஆம் தேதி பள்ளிகளை திறக்க அரசு இறுதி முடிவு?

தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்புகளுக்கு ஜனவரி 20ஆம் தேதி பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Samayam Tamil 12 Jan 2021, 9:20 am
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்ட பள்ளிகளை நவம்பர் 16 ஆம் தேதி முதல் 9,10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


ஆனால் கொரோனா அச்சம் காரணமாக, பள்ளி, கல்லூரிகளை தற்போது திறக்க கூடாது என்றும், ஏற்கனவே பள்ளிகளை திறந்த மாநிலங்களில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை சுட்டிக் காட்டியும், அரசியல் கட்சித் தலைவர்கள், கல்வியாளர்கள், பொது மக்கள் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து பெற்றோர்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்திய தமிழக அரசு பள்ளிகள் திறப்பை ஒத்திவைத்தது. இதனிடையே, அடுத்த கட்ட பொது முடக்கத்தை தளர்வுகளுடன் அறிவித்த தமிழக அரசு, கல்லூரி இளங்கலை இறுதி வகுப்புகளை டிசம்பர் 7ஆம் தேதி முதல் தொடங்க அனுமதி அளித்தது. அதன்படி கல்லூரிகள் இயங்கி வரும் நிலையில் பள்ளிகள் திறப்பு எப்போது என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.
பொங்கல் பரிசு 2500 ரூ - மீண்டும் ஹேப்பி நியூஸ் சொன்ன தமிழக அரசு!
அதேசமயம், கொரோனா பாதிப்பு தமிழகத்தில் குறைந்து வருவதால், பாதுகாப்பு வழிமுறைகளை சரிவர கடைபிடித்து பள்ளிகளைத் திறக்கலாம் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. எனவே, பொங்கல் பண்டிகைக்குப் பின்னர் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொங்கல் விடுமுறைக்கு பிறகு பள்ளிகளை திறக்கலாம் என்று பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இதையொட்டி பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதில், தமிழகத்தில் பள்ளிகளை திறக்க 70 சதவீதத்துக்கும் மேலான பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தகவல் தெரிவித்திருந்தது.

சசிகலா வருகை குறித்து எடப்பாடி கூறியது என்ன?
இந்த நிலையில், தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்புகளுக்கு ஜனவரி 20-ம் தேதி பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெற்றோர்களிடம் கருத்து கேட்ட நிலையில் பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி