ஆப்நகரம்

அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் : கிளாம்பாக்கத்தில் இருந்து கிளம்பும் பேருந்துகள் - வெளியான முக்கிய அறிவிப்பு!

அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வருவதை முன்னிட்டு போக்குவரத்துத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Authored byஎழிலரசன்.டி | Samayam Tamil 26 Mar 2024, 5:12 pm
வரும் 29ஆம் தேதி புனித வெள்ளி என்பதால் அன்று அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. அடுத்து சனி, ஞாயிறு வார விடுமுறை நாட்கள் வருகிறது. இதனை முன்னிட்டு சென்னையில் பணியாற்றுபவர்கள் சொந்த ஊர்களுக்கு பயணிக்க உள்ளனர். இதேபோல தமிழகம் முழுவதும் இருந்து மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Samayam Tamil Special Buses


இதனை கருத்தில் கொண்டு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்கவும் முடிவு எடுத்துள்ளன.

பொன்முடி அமைச்சர் பதவியில் நீடிப்பாரா? - வெயிட்டிங் லிஸ்ட்டில் இன்னொரு ‘கண்டம்’ -நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழக்கு விரைவில் விசாரணை!

இதுதொடர்பாக போக்குவரத்துத் துறை மேலாண் இயக்குனர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு வரும் 28ஆம் தேதி (வியாழக் கிழமை) 505 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 29ம் தேதி (வெள்ளிக்கிழமை) 300 பேருந்துகளும், 30ஆம் தேதி (சனிக்கிழமை) 345 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன

சென்னை கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 28, 29 மற்றும் 30 (வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமை) அன்று 120 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகளுக்கு அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வார இறுதியில் வியாழக்கிழமை அன்று 13,622 பயணிகளும் வெள்ளிக்கிழமை அன்று 3,929 பயணிகளும் சனிக்கிழமை 2,367 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 12,500 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர் என்றும் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாமக வேடந்தாங்கல் பறவை இல்ல - எடப்பாடி பழனிசாமிக்கு அன்புமணி சூடான பதில்!
இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும், எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள வேண்டும் எனவும் போக்குவரத்துத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
எழுத்தாளர் பற்றி
எழிலரசன்.டி
நான் எழிலரசன். கடந்த 8 ஆண்டுகளாக டிஜிட்டல் ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சமூகம் சார்ந்த செய்திகள், கட்டுரைகள் பலவற்றை எழுதியுள்ளேன். தற்போது சமயம் தமிழ் இணையதளத்தில் Digital Content Producer - ஆக பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி