ஆப்நகரம்

ஜன., 2ல் பள்ளிகள் திறப்பு: சிறப்புப் பேருந்துகள் அறிவிப்பு

அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் தொடங்குவதால் புதன்கிழமை வரை சென்னைக்கு 400 சிறப்புப் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை முடிவுசெய்துள்ளது.

TNN 31 Dec 2017, 1:10 am
சென்னை: அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் தொடங்குவதால் புதன்கிழமை வரை சென்னைக்கு 400 சிறப்புப் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை முடிவுசெய்துள்ளது.
Samayam Tamil tn transport runs special buses for new year holidays
ஜன., 2ல் பள்ளிகள் திறப்பு: சிறப்புப் பேருந்துகள் அறிவிப்பு


2018வது புத்தாண்டு நாளை கொண்டாடப்படுகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையைத் தொடர்ந்து புத்தாண்டு விடுமுறையும் இணைவதால் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறையாக அமைந்துள்ளது. இதனால், சென்னையிலிருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

வழக்கமாக 3,300 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் கூடுதலாக 300 முதல் 400 சிறப்புப் பேருந்துகள் இவ்விரு நாட்களில் இயக்கப்படுகின்றன. சென்னையிலிருந்து திருச்சி, மதுரை, நாகர்கோவில், கோயம்புத்தூர், வேளாங்கண்ணி, மதுரை, ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், விடுமறை முடிந்து திங்கள் மாலை முதல் செவ்வாய் வரை சென்னைக்குத் திரும்பும் பொதுமக்களின் வசதிக்காக அதே அளவு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பின் ஜனவரி 3ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட காரணத்தால், தேவைக்கேற்ப புதன்கிழமையும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி