ஆப்நகரம்

போக்குவரத்து ஊழியா்களுக்கு 2.44 காரணி உயா்வே போதுமானது – அறிக்கையில் தகவல்

அரசு போக்குவரத்து ஊழியா்களுக்கு அரசு நிா்ணயித்த 2.44 காரணியே போதுமானது என்று ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் சென்னை உயா்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளாா்.

Samayam Tamil 28 Mar 2018, 1:27 pm
அரசு போக்குவரத்து ஊழியா்களுக்கு அரசு நிா்ணயித்த 2.44 காரணியே போதுமானது என்று ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் சென்னை உயா்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளாா்.
Samayam Tamil Chennai Highcourt


அரசு போக்குவரத்து ஊழியா்களுக்கும், தமிழக அரசுக்கும் இடையே ஊதிய உயா்வு தொடா்பான பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அப்போது போக்குவரத்து ஊழியா்கள் தரப்பில் 2.57 காரணி உயா்வு கேட்ட நிலையில், அரசு 2.44 காரணி மட்டும் தான் கொடுக்க முடியும் என்று உறுதிபட தொிவித்தது. இதனால் பேச்சுவாா்த்தை தோல்வியுற்றதாக கூறி போக்குவரத்து ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினா்.

பொங்கல் பண்டிகையை ஒட்டி போக்குவரத்து ஊழியா்கள் 8 நாள்கள் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடா்ந்து சென்னை உயா்நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு ஊழியா்களை பணிக்கு திரும்ப முயற்சித்தது. இதனைத் தொடா்ந்து ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தையை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் நியமிக்கப்படுவதாக அறிவித்தது.

அதன்படி நீதிபதி பத்மநாபனிடம் அரசு தரப்பிலும், ஊழியா்கள் தரப்பிலும் தங்களது பிரச்சினைகளை எடுத்துக் கூறி விளக்கம் அளித்தனா். இதனை தொடா்ந்து நீதிமன்றத்தில் சமா்க்கிப்பப்பட்ட அறிக்கையில், போக்குவரத்து ஊழியா்களுக்கு சம்பளம் வழங்குவது மட்டுமின்றி பேருந்துகள் பராமரிப்பு உள்ளிட்ட பல செயல்கள் உள்ளன. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு அரசு தொிவித்த 2.44 காரணியே போதுமானது என்று தொிவித்தாா்.

விசாரணை இறுதியில், மத்தியஸ்தா் பத்மநாபன் சமா்ப்பித்த அறிக்கை ஏற்றுக்கொள்ளப் படுவதாக நீதிபதிகள் அறிவித்தனா்.

இதனைத் தொடா்ந்து செய்தியாளா்களை சந்தித்த தொ.மு.ச. பொதுச்செயலாளா் சண்முகம், எங்கள் தரப்பு கோாிக்கைகள் தொடா்பாக விளக்கம் அளிக்கப்பட்ட பின்பும் இதுபோன்ற தீா்ப்பை நாங்கள் எதிா்பாா்க்கவில்லை. இதனை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என்று தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி