ஆப்நகரம்

நாளை முதல் இலவசம்..! தமிழக பெண்களுக்கு ஹேப்பி நியூஸ்...

தமிழகத்தில் நாளை முதல் அனைத்து மகளிருக்கும் சாதாரண கட்டண நகரப்பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம்

Samayam Tamil 7 May 2021, 2:08 pm
தமிழக முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் மு.க.ஸ்டாலின் முதன் முறையாக தலைமைச் செயலகம் வருகை தந்தார். அப்போது அவருக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பளித்தனர். முதலமைச்சராக பதவி ஏற்ற பின்னர் அடுத்தடுத்து 3 கோப்புகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.
Samayam Tamil கோப்புப்படம்


கொரோனா நிவாரணமாக குடும்பத்துக்கு ரூ. 4000, ஆவின் பால்விலை லிட்டருக்கு ரூ. 3 குறைப்பு, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏற்கும், நாளை முதல் அனைத்து மகளிருக்கும் சாதாரண கட்டண நகரப்பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் உள்ளிட்ட தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களுக்கு தொடக்கமாக கையெழுத்திட்டார்.

இந்நிலையில், நாளை முதல் அரசு உள்ளூர் பேரூந்துகளில் மகளிர் கட்டணமில்லா பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் கோப்பில் விளக்கப்பட்டுள்ளதாவது, '' தமிழகம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்து கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகர பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் பெண்கள், உயர் கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்து பயண அட்டை இல்லாமலும் நாளை முதல் பயணம் செய்ய தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

உதயநிதி ஃப்ரண்டுன்னா சும்மாவா? -அன்பில் மகேஷுக்கு ஸ்டாலின் கொடுத்த இன்ப அதிர்ச்சி!

இதன் மூலம் போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்படும் செல்வது தொகையான 1200 கோடி ரூபாயை மானியமாக வழங்கி அரசு ஈடுகட்டும்'' என இவ்வாறு அரசு கோப்பில் கூறப்பட்டுள்ளது.

திமுக தேர்தல் அறிக்கையில் இதுகுறித்து கூறப்பட்டிருந்ததாவது;

''அரசு உள்ளூர் பேரூந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயண வசதி வழங்கப்படும்.- இந்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற தனி அமைச்சகம் அமைக்கப்படும். இதற்கு திட்டங்கள் செயலாக்க அமைச்சகம் என்று பெயர்'' என இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

அடுத்த செய்தி