சென்னை : தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு மாதமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், பிரதமர் மோடி இன்றுவரை முதல்வரை பார்க்க வராதது ஏன் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த மாதம் 22ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். தீவிர சிகிச்சைக்கு பிறது தற்போது முதல்வரின் உடல்நலம் தேறிவருவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதாவை, பிரதமர் மோடி பார்க்க வரவில்லை என்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் விமர்சித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், அதிமுக நிறுவனர் எம்.ஜி.ராமச்சந்திரன் உடல்நலம் பாதிக்கப்பட்டு இதே அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி எம்.ஜி.ஆரை பார்க்க நேரில் வந்தார். அதே போல் ஜெயலலிதாவிற்கு விபத்து ஏற்பட்டு சென்னை தேவகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அவரை நேரில் பார்க்க வந்தார். ஆனால் தற்போது பிரதமர் மோடி ஜெயலலிதாவை நேரில் பார்க்க வராதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
காவிரி பிரச்னை தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட திமுகவிற்கு உரிமை இல்லை என்று மதிமுக தலைவர் வைகோ கருத்து தெரிவித்திருந்தார். இது குறித்து பேசிய திருநாவுக்கரசர், அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் அல்லது வேண்டாம் என்று முடிவு செய்யும் உரிமை ஒவ்வொரு கட்சிக்கும் உண்டு. ஆனால் திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டக்கூடாது என்று சொல்வது சரியல்ல என்று கூறினார். காங்கிரசின் சட்டமன்றக்குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி மற்றும் விவசாயப்பிரிவை சேர்ந்த பவன்குமார் அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்றும் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 22ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். தீவிர சிகிச்சைக்கு பிறது தற்போது முதல்வரின் உடல்நலம் தேறிவருவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதாவை, பிரதமர் மோடி பார்க்க வரவில்லை என்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் விமர்சித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், அதிமுக நிறுவனர் எம்.ஜி.ராமச்சந்திரன் உடல்நலம் பாதிக்கப்பட்டு இதே அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி எம்.ஜி.ஆரை பார்க்க நேரில் வந்தார். அதே போல் ஜெயலலிதாவிற்கு விபத்து ஏற்பட்டு சென்னை தேவகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அவரை நேரில் பார்க்க வந்தார். ஆனால் தற்போது பிரதமர் மோடி ஜெயலலிதாவை நேரில் பார்க்க வராதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
காவிரி பிரச்னை தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட திமுகவிற்கு உரிமை இல்லை என்று மதிமுக தலைவர் வைகோ கருத்து தெரிவித்திருந்தார். இது குறித்து பேசிய திருநாவுக்கரசர், அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளலாம் அல்லது வேண்டாம் என்று முடிவு செய்யும் உரிமை ஒவ்வொரு கட்சிக்கும் உண்டு. ஆனால் திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டக்கூடாது என்று சொல்வது சரியல்ல என்று கூறினார். காங்கிரசின் சட்டமன்றக்குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி மற்றும் விவசாயப்பிரிவை சேர்ந்த பவன்குமார் அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்றும் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.