ஆப்நகரம்

உடனே இத பண்ணிடுங்க..! இல்லன்னா கரென்ட் பில் கட்ட முடியாது..!

மின் கட்டணம் செலுத்த ஆதார் வரும் ஜனவரிக்குள் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது

Authored byVelayuthan Murali | Samayam Tamil 24 Nov 2022, 2:55 pm

ஹைலைட்ஸ்:

  • உடனே இத பண்ணிடுங்க..!
  • மின் இணைப்பு எண் - ஆதார் எண் இணைக்க காலக்கெடு!
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil EB
மின் கட்டணம் செலுத்த ஆதார் அடையாள எண்ணை வரும் ஜனவரி மாதத்திற்குள் இணைக்க வேண்டும் என தமிழக மின் வாரியம் பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 3 கோடிக்கு மேல் மின் இணைப்புகள் உள்ளன. அதன்படி 2 மாதத்துக்கு ஒரு முறை மின் பயன்பாடு கணக்கிடப்பட்டு அதற்கான கட்டணத்தை செலுத்தும் முறை நடைமுறையில் இருந்து வருகிறது. பயனர்கள் நேரடியாக மின் வாரிய அலுவலகங்களுக்குச் சென்றோ, அல்லது மின்வாரிய இணையதளம், மின் வாரிய செயலி, கூகுள் பே, போன் பே செயலிகள் மூலமாகவோ மின் கட்டணத்தை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின் வாரியம் அறிவித்தது. இது தொடர்பாக நுகர்வோரின் செல்போன் எண்ணுக்கும் மின் வாரியம் குறுஞ்செய்தி அனுப்பியது.

அதாவது, தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்களில் விவசாய இணைப்புகள், கைத்தறி நுகர்வோர்கள், முதல் 100 யூனிட் இலவச மின்சாரம் பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் ஆகியோர் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்து உள்ளது.
கட்சி தொண்டர்கள் தாக்கப்பட்டது வருத்தம் அளிக்கிறது: ரூபி மனோகரன் பேட்டி!
மேலும், ஆதார் எண்ணை இணைப்பதற்காக https://www.tnebltd.gov.in/adharupload/adhaentry.xhtml இணைய வழி இணைப்பு முகவரியையும் மின் வாரியம் வெளியிட்டு உள்ளது.

இந்நிலையில் இதுவரை காலக்கெடு நிர்ணயிக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது வரும் ஜனவரி மாதத்திற்குள் மின் இணைப்பு எண்ணுடன், ஆதாரை இணைக்க வேண்டும் என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்ட நாள் முதலே, மின் வாரிய இணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்த முற்படும் போது, ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே கட்டணம் செலுத்த முடியும் என்கிற அறிவிப்பு காட்டப்பட்டு வருகிறது. இதனால், மின் நுகர்வோர்கள் மின்கட்டணம் செலுத்த முடியாமல் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.
எழுத்தாளர் பற்றி
Velayuthan Murali
நான் மு.வேலாயுதன். MBA பட்டதாரி. பத்திரிகை துறை மீது ஆர்வம் கொண்ட நான், 17வது வயதில், அச்சு ஊடகத்தில் காலடி எடுத்து வைத்தேன். சுமார் 5 ஆண்டுகள் கடந்த பயணம், என்னை, காட்சி ஊடகத்திற்கு அழைத்துச் சென்றது. அங்கு 2 ஆண்டுகள் தொடர்ந்த பயணம், என்னை, டிஜிட்டல் ஊடகத்திற்கு அழைத்து வந்தது. தமிழ்நாடு, இந்தியா, உலகம் தொடர்பான நடப்பு செய்திகளை எழுதி வருகிறேன். பத்திரிகையாளராக சாமானிய மக்களின் குரலாக ஒலிப்பதில் சமரசம் இன்றி பணியாற்றி வருகிறேன். Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Digital Content Producer ஆக தற்போது பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி