ஆப்நகரம்

இந்த மாசம் கரன்ட் பில் கட்டுலன்னா கனெக்ஷன் கட்டா? -என்ன சொல்கிறது மின் வாரியம்!!

மார்ச் மாதத்துக்கான மின்கட்டணத்தை செலுத்தவில்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படுவதாக தகவல் பரவிவரும் நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

Samayam Tamil 27 Mar 2020, 11:03 pm
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதிவரை ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil tneb


இதனால் போக்குவரத்து சேவைகள் முற்றிலும் முடங்கியுள்ளன. இதன் காரணமாக, தமிழகம் முழுவதும் குடியிருப்புகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் மார்ச் மாதத்துக்கான மின்சார பயன்பாட்டுக்கான கணக்கீடு (கரன்ட் ரீடிங்) எடுக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.

இதனை கருத்தில்கொண்டு, முந்தைய மாதங்களின் (ஜனவரி, பிப்ரவரி) மின்கட்டணத்தை அடிப்படையாக கொண்டு, மார்ச் மாதத்துக்கான மின் கட்டணத்தை நுகர்வோர் செலுத்தலாம் என்று தமிழ்நாடு மின் வாரியம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.

மின்சார வாரியத்தையும் விட்டுவைக்காத கொரோனா!!

இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் சில இடங்களில், இந்த மாதத்துக்கான மின்கட்டணத்தை செலுத்தாதவர்களின் வீட்டில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் இன்று விளக்கம் அளித்துள்ளது. " மின் கட்டணம் செலுத்தவில்லையெனில், மின் இணைப்பு துண்டிக்கப்படாது. இதுகுறித்து பரப்பப்பட்டுவரும் தகவல் தவறானது.

இனிமே இதுக்கு ஆன்-லைன் அப்ளிகேஷன் மட்டும்தான்!!

மார்ச் மாதத்துக்கான மின் கட்டணத்தை ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் செலுத்தலாம்" என்று மின் வாரியம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி