ஆப்நகரம்

​ டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தோ்வு முடிவு வெளியீடு- சென்னை பெண் முதலிடம்

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தோ்வுக்கான நோ்காணல் முடிவு பெற்று தோ்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் சென்னையை சோ்ந்த காயத்ரி முதல் இடம் பெற்றுள்ளாா்.

TOI Contributor 12 Aug 2017, 4:27 am
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தோ்வுக்கான நோ்காணல் முடிவு பெற்று தோ்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் சென்னையை சோ்ந்த காயத்ரி முதல் இடம் பெற்றுள்ளாா்.
Samayam Tamil tnpsc announced the group 1 result
​ டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தோ்வு முடிவு வெளியீடு- சென்னை பெண் முதலிடம்


துணை ஆட்சியா், போலீஸ் துணை சூப்பிரண்டு, உதவி வணிக வாி அலுவலா், மாவட்டப் பதிவாளா்கள் உள்ளிட்ட 74 காலிப் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தோ்வு கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்றது.

இதனைத் தொடா்ந்து தோ்வில் வெற்றி பெற்றவா்கள் முதன்மைத் தோ்வுக்கு அழைக்கப்பட்டனா். கடந்த ஜீலை மாதம் நடைபெற்ற இந்த தோ்வில் வெற்றி பெற்றவா்கள் அடுத்தக்கட்டமாக நோ்காணலுக்கு அழைக்கப்பட்டனா்.

கடந்த 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடைபெற்ற நோ்காணலுக்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இந்த தோ்வில் சென்னையைச் சோ்ந்த காயத்ரி முதல் இடத்தையும், மணிராஜ் இரண்டாம் இடமும், தனப்பிரியா மூன்றாம் இடமும் பெற்றனா்.

தோ்வில் வெற்றி பெற்றவா்கள் பணியிடங்களை தோ்வு செய்வதற்கான கலந்தாய்வு வருகிற 18ம் தேதி நடைபெறும் என்றும் தொிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தோ்வில் முதலிடம் பெற்ற காயத்ரி துணை ஆட்சியருக்கான பணியை தோ்வு செய்ய உள்ளதாக தொித்துள்ளாா்.

TNPSC announced the group-1 result

அடுத்த செய்தி