ஆப்நகரம்

டிஎன்பிஎஸ்சி குரூப்1 தேர்வு தேதி அறிவிப்பு!

கொரோனாவால் தள்ளி வைக்கப்பட்ட குரூப்1 தேர்வுக்கான தேதியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது

Samayam Tamil 1 Oct 2020, 9:11 pm
தமிழ்நாடு அரசில் துணை ஆட்சியர் பணிக்கு காலியாக உள்ள 18 இடங்கள் உள்பட மொத்தம் 69 பணியிடங்களுக்கான குரூப்1 பணிகளுக்கான முதல் நிலைத் தேர்வு ஏப்ரல் 5ஆம் தேதியன்று நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


ஆனால், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக குரூப்1 முதல்நிலைத் தேர்வானது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பை கடந்த மார்ச் மாதம் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது.

இதனிடையே, பொது முடக்கத்தில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனாவால் தள்ளி வைக்கப்பட்ட குரூப்1 தேர்வுக்கான தேதியை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 கலந்தாய்வு தேதி அறிவிப்பு!

அதன்படி, 69 காலிப்பணியிடங்களுக்கான குரூப்1 முதல்நிலைத்தேர்வு 2021- ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மாதம் 3ஆம் தேதி முற்பகலில் நடைபெறும். அதெபோல், குறு, சிறு, நடுத்தர தொழில் வளர்ச்சி நிறுவன உதவி இயக்குனர், உதவி கண்காணிப்பாளர் பதவிக்கான (12 காலிப்பணியிடங்கள்) தேர்வு 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்வுக்கு ஏற்கெனவே விண்ணப்பித்துள்ளவர்கள் அப்படியே தொடரலாம் எனவும், கூடுதல் விவரங்களை டிஎன்பிஎஸ்சி இணையதளங்களான www.tnpsc.gov.in, www.tnpsc.exam.in, www.tnpsc.exam.net ஆகியவற்றில் அறியலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி