ஆப்நகரம்

டிஎன்பிஎஸ்சி குரூப்4 தேர்வு: புதிய கலந்தாய்வு தேதி அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப்4 தேர்வுக்கான புதிய கலந்தாய்வு தேதியை வெளியிட்டுள்ள டிஎன்பிஎஸ்சி, அதற்கான அழைப்பு கடித்தத்தை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது

Samayam Tamil 12 Feb 2020, 9:08 pm
சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு சம்பவங்கள் பூதாகரமாகியுள்ள நிலையில், புதிய கலந்தாய்வு தேதியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


தமிழகம் முழுவதும் குரூப் 4 பதவிகளுக்கான பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற எழுத்துத் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தேர்வில் முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, தேர்வாணையம் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி போலீசார், முறைகேடு தொடர்பாக அரசு ஊழியர்கள், தேர்வு எழுதியவர்கள், இடைத்தரகர்கள் என 16 பேரை கைது செய்துள்ளனர். இதனிடையே, 2017ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடு நடைபெற்றது தெரியவந்துள்ளது. இது தொடர்பாகவும் 18க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

டிஎன்பிஎஸ்சி முறைகேடு: விடைத்தாள்களை மாற்ற உதவியவர் கைது; அவிழும் முடிச்சுகள்!

அதேசமயம், முறைகேடு குற்றச்சட்டுக்கு ஆளான 99 தேர்வர்களை தகுதிநீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்ட டிஎன்பிஎஸ்சி, அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் முறைகேட்டில் ஈடுபட்ட 39 பேருக்கு பதில் தகுதியான 39 நபர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டு, அவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்ற 39 பேரின் புதிய பட்டியலை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி, புதிய தேர்ச்சி பட்டியலில் இடம்பெற்றவர்கள் தங்களது சான்றிதழ் சரிபார்ப்புக்காக பிப்ரவரி 7ஆம் தேதி வரை இணையதளத்தில் பதிவேற்றலாம் எனவும் தெரிவித்திருந்தது.

டிஎன்பிஎஸ்சி முறைகேடு: ஜெயக்குமாரை விவாதத்துக்கு அழைக்கும் அப்பாவு

இந்நிலையில், பிப்ரவரி 19ஆம் தேதி புதிய கலந்தாய்வு நடத்தப்படும் என தேதியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதற்கான அழைப்பு கடித்தத்தை டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி