ஆப்நகரம்

'குரூப் 4' தேர்வு முறைகேடு குற்றச்சாட்டு: தேர்வு மையங்களில் அதிரடி விசாரணை!!

குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக, டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் ராமநாதபுரத்தில் இன்று அதிரடியாக விசாரணை நடத்தினர்.

Samayam Tamil 10 Jan 2020, 10:33 pm
'குரூப் 4' தேர்வு முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக, ராமநாதபுரம் மாவட்ட த்தில் உள்ள இரண்டு தேர்வு மையங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிரடி ஆய்வு நடத்தப்பட்டது.
Samayam Tamil tnpsc officials done enquire in group 4 examination centre at ramanathapuram
'குரூப் 4' தேர்வு முறைகேடு குற்றச்சாட்டு: தேர்வு மையங்களில் அதிரடி விசாரணை!!


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய 'குரூப் 4' தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், அதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

தமிழகத்தில் மொத்தம் 5,575 மையங்களில் 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த தேர்வை எழுதினர். அத்தேர்வு முடிவுகளில், ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய இடங்களில் அமைக்கப்பட் இரண்டு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் தான் முன்னிலை பெற்றிருக்கிறார்கள்.

டி.என்.பி.எஸ்.சி:குருப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு..!

இதில் சமூக இடஒதுக்கீடு ரீதியாக முன்னிலை பெற்றவர்களும் இந்த இரண்டு தேர்வு மையங்களிலேயே தேர்வு எழுதியிருந்தனர்.

தரவரிசைப் பட்டியலில் (ரேங்க்) குறிப்பிட்ட இரண்டு மையங்களில் இருந்து தேர்ச்சி பெற்றவர்களே அதிக அளவில் இடம்பிடித்ததால், இந்த மையங்களில் ஏதேனும் முறைகேடுகள் நடைபெற்றிருக்கலாம் என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுப்பப்பட்டது.

இந்நிலையில், இந்த குற்றச்சாட்டு குறித்து ஆய்வு செய்வதற்காக டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் தலைமையிலான குழுவினர், ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நேரில் விசாரணை நடத்தினர்.

குரூப் தேர்வில் முறைகேடு - டி.என்.பி.எஸ்.சி. விளக்கம் என்ன?

முதலில் அவர்கள், ராமநாதபுரம் முத்துப்பேட்டை தனியார் கல்லூரியிலும், அதைத்தொடர்ந்து ராமேஸ்வரம் வேர்கோடு பள்ளி தேர்வு மையத்திலும் ஆய்வு, விசாரணை மேற்கொண்டனர்.

முன்னதாக, ராமநாதபுரம் அரசு கருவூல அலுவலகத்தில் வைத்து, சர்ச்சைக்குரிய தேர்வு மையங்களில் உள்ள அறைகளில் கண்காணிப்பு பணி பார்த்த அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

அடுத்த செய்தி