ஆப்நகரம்

டிஎன்பிஎஸ்சி முறைகேடு: விடைத்தாள்களை மாற்ற உதவியவர் கைது; அவிழும் முடிச்சுகள்!

அரசு வாகனத்தில் இருந்து விடைத்தாள்களை மாற்றி காரில் எடுத்து சென்று திருத்தி, பின்னர் மீண்டும் அதே வாகனத்தில் வைக்க உதவியதாக ஓட்டுநர் ஒருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்

Samayam Tamil 12 Feb 2020, 6:29 pm
சென்னை: டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக ஓட்டுநர் ஒருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


தமிழகம் முழுவதும் குரூப் 4 பதவிகளுக்கான பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற எழுத்துத் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தேர்வில் முறைகேடு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து, தேர்வாணையம் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி போலீசார், முறைகேடு தொடர்பாக அரசு ஊழியர்கள், இடைத்தரகர்கள், தேர்வர்கள் என இதுவரை 16 பேரை கைது செய்துள்ளனர். இதனிடையே, 2017ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 2ஏ தேர்விலும் முறைகேடு நடைபெற்றது தெரியவந்துள்ளது. இது தொடர்பாகவும் 18க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

டிஎன்பிஎஸ்சி முறைகேடு: ஜெயக்குமாரை விவாதத்துக்கு அழைக்கும் அப்பாவு

முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு ஆளான நபர்கள் அனைவரும் குறிப்பிட்ட தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் எனவும், சில மணி நேரங்களிலேயே அழியும் தன்மை கொண்ட பேனா மூலம் அவர்கள் தேர்வெழுதி, அதன் பின்னர் இடைத்தரகர்கள் உள்ளிட்டவர்களுடன் துனையுடன் விடைத்தாள்களை கொண்டு செல்லும் வழியில் வினாக்களுக்கு பதிலளித்து முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இதனிடையே, டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் காவலர் சித்தாண்டியை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். அதேசமயம், மற்றொரு முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவரும், இடைத்தரகராக செயல்பட்டவருமான ஜெயக்குமார் என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அத்துடன், இந்த முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள டிஎன்பிஎஸ்சி ஊழியா் ஓம்காந்தனின் கூட்டாளிகள் 3 பேரை சிபிசிஐடி போலீஸாா் நேற்று கைது செய்தனர்.

இஸ்ரோவை ஏமாற்றி வந்த காவலர்... அதிர்ந்துபோன அரசு!

ஜெயக்குமாரிடம் சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில், ரூ.4 கோடிக்கு 23 அரசு வேலைகளை அவர் விற்றது அம்பலமாகியுள்ளது. தேர்வர்களிடம் பணம் பெற்று முறைகேடுக்கு உதவியவர்களுக்கு ஜெயக்குமார் பங்கிட்டு கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tirunelveli: அரசு அங்கன்வாடி மையத்தில் ஆட்சியரின் மகள்... நெல்லை ஆட்சியருக்கு பாராட்டு

ராமநாதபுரத்தில் இருந்து சென்னைக்கு குரூப்- 4 விடைத்தாள்களை லாரியில் எடுத்து வந்தபோது, அந்த லாரியில் இருந்த குறிப்பிட்ட மையங்களில் தோ்வு எழுதியவா்களின் விடைத்தாள்களைத் திருடி, அதில் திருத்தம் செய்து மீண்டும் அந்த லாரியில் முறைகேடி ஈடுபட்டவர்கள் சோ்த்ததாகவும் தெரிகிறது.

இந்நிலையில், இந்த முறைகேடு தொடர்பாக ஓட்டுநர் மரிய லிஜோஸ்குமர் என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். அரசு வாகனத்தில் இருந்து விடைத்தாள்களை மாற்றி காரில் எடுத்து சென்று திருத்தி, பின்னர் மீண்டும் அதே வாகனத்தில் வைக்க உதவியதாக இவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அடுத்த செய்தி