ஆப்நகரம்

அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு சலுகை: தமிழக இளைஞர்களுக்கு சூப்பர் அறிவிப்பு

அரசு வேலைவாய்ப்பில் தமிழ் வழிக் கல்வி பயின்றோருக்கு இடஒதுக்கீடு குறித்து டிஎன்பிஎஸ்சி உத்தரவு

Samayam Tamil 31 Jul 2021, 5:14 pm
அரசுப் பணி நியமனத்தில் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு 20% இடஒதுக்கீடு சலுகையில் குளறுபடி இருப்பதாக ஏற்கனவே உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
Samayam Tamil file pic


அந்த மனுவில், டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் நிலை தேர்வில் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு 20% ஒதுக்கீடு சலுகை வழங்கப்படுவதும் அதற்கான பட்டியல் தயாரிக்கப்படுவதும் உள்ளது.

ஆனால், நீதிமன்றத்தின் உத்தரவின் படி 1 முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு இடஒதுக்கீடு சலுகை வழங்கப்படாமல், கல்லூரியில் தமிழ் வழி படித்தவர்களுக்கு மட்டும் வழங்கப்படுவதாக குற்றசாட்டு எழுப்பப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி பதிலளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் அப்போது உத்தரவிட்டது.

தொடர்ந்து இந்த குளறுபடி இருந்து வந்த நிலையில், அரசு வேலைவாய்ப்பில் தமிழ்வழிக் கல்வி பயின்றோருக்கு இடஒதுக்கீடு வழங்க ஏதுவாக தற்போது டிஎன்பிஎஸ்சி விவரம் கோரியுள்ளது.

தமிழகத்தில் 66.2% பேரின் உடலில் இம்யுனோகுளோபுலின்-ஜி இருக்காம்..! இது எதுக்கு?

அது குறித்த சுற்றறிக்கையில், குரூப் 1 முதல்நிலைத் தேர்வு எழுதியவர்கள் 1-10ம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வி படித்ததற்கான சான்று, +1, +2 அல்லது பட்டப்படிப்பை தமிழ் வழியில் படித்ததற்கான சான்று ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி