குரூப்-4 தேர்வும், கிராம நிர்வாக அலுவலர் தேர்வும் தனித்தனியாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இரண்டு தேர்வுகளும் ஒரு சேர நடத்த டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளது.
தமிழக அரசில் காலியாக உள்ள பணியடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி மூலம் கிரேடுகள் அடிப்டையில் தனித்தனியாக தேர்வுகள் நடத்தப்பட்டு பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இதுவரை குரூப் 4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வுகள் தனித்தனியாக நடத்தப்பட்டு வந்தது. இவை இரண்டிற்கும் 10ம் வகுப்பு தகுதியாக கொண்டுள்ளதால், பெரும்பாலான விண்ணப்பதாரர்கள் இரு தேர்வுகளுக்கும் விண்ணப்பித்து வந்தனர்.
இவை இரண்டும் தனித்தனியாக தேர்வுகளை நடத்துவதால், ஒவ்வொன்றுக்கும் 15 கோடி ரூபாய் செலவாகிறது.
இந்நிலையில், செலவுகளை கட்டுப்படுத்துவம் விண்ணப்பதாரர்களின் வசதிக்கும் ஏற்ப, இனி வரும் காலங்களில் இரண்டு தேர்வுகள் ஒரே தேர்வாக நடத்த டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு விரும்பும் பணியினை கலந்தாய்வு மூலம் தேர்நதெடுத்துக் கொள்ளலாம் என்றும் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசில் காலியாக உள்ள பணியடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி மூலம் கிரேடுகள் அடிப்டையில் தனித்தனியாக தேர்வுகள் நடத்தப்பட்டு பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இதுவரை குரூப் 4 மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வுகள் தனித்தனியாக நடத்தப்பட்டு வந்தது. இவை இரண்டிற்கும் 10ம் வகுப்பு தகுதியாக கொண்டுள்ளதால், பெரும்பாலான விண்ணப்பதாரர்கள் இரு தேர்வுகளுக்கும் விண்ணப்பித்து வந்தனர்.
இவை இரண்டும் தனித்தனியாக தேர்வுகளை நடத்துவதால், ஒவ்வொன்றுக்கும் 15 கோடி ரூபாய் செலவாகிறது.
இந்நிலையில், செலவுகளை கட்டுப்படுத்துவம் விண்ணப்பதாரர்களின் வசதிக்கும் ஏற்ப, இனி வரும் காலங்களில் இரண்டு தேர்வுகள் ஒரே தேர்வாக நடத்த டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு விரும்பும் பணியினை கலந்தாய்வு மூலம் தேர்நதெடுத்துக் கொள்ளலாம் என்றும் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.