ஆப்நகரம்

கள்ளு விற்பதை தமிழகத்தில் அனுமதிக்க கோரும் டிஎன்டிஎம் அமைப்பு

தமிழ்நாடு டோடி மூமெண்ட் (டிஎன்டிஎம்) அமைப்பின் உறுப்பினர் கதிரேசன்தான் திருப்பூர் லோக் சபா தொகுதியில் முதல் நாளான கடந்த செவ்வாய் கிழமை அன்று வேட்புமனு தாக்கல் செய்தார். கே. எஸ். பழனிசாமி வேட்புமனுவை பெற்றுக்கொண்டார்.

Samayam Tamil 19 Mar 2019, 6:19 pm
தமிழ்நாடு டோடி மூமெண்ட் (டிஎன்டிஎம்) அமைப்பின் உறுப்பினர் கதிரேசன்தான் திருப்பூர் லோக் சபா தொகுதியில் முதல் நாளான கடந்த செவ்வாய் கிழமை அன்று வேட்புமனு தாக்கல் செய்தார். கே. எஸ். பழனிசாமி வேட்புமனுவை பெற்றுக்கொண்டார்.
Samayam Tamil kallu


இவர் ஏற்கனவே 2011 ஆண்டு மேயர் தேர்தலில் நின்று தோற்றார். தமிழகத்தில் பனைமரத்தில் இருந்து கள் இறக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் பாதிப்படைவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். பிரேசில் நாட்டில் உள்ளது போல எத்தனால் கலந்து பயன்படுத்தலாம் என அவர்கள் கோருகின்றனர். தேர்தலில் வெற்றி பெற்றால் கள் விற்பவர்களது வாழ்வாதாரம் காக்கப்படும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

உடலுக்கு கேடான மதுவை அரசே ஏற்று நடத்தி விற்றுவரும்போது, சில ஆரோக்கிய பலன்கள் கொண்ட போதை நீராகாரமான கள் விற்பதில் என்ன தவறு என கேள்வி எழுப்பப்படுகிறது.

அடுத்த செய்தி