ஆப்நகரம்

அப்பல்லோ இயக்குநர் ரெட்டி மீது குற்ற வழக்கு: வழக்கறிஞர் புகார்

அப்பல்லோ மருத்துவமனை இயக்குநர் பிரதாப் சி ரெட்டி மீது குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று திண்டுக்கல் வளரும் சமூக வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மாநில செயலாளர் செபாஸ்டின் புகார் மனு அளித்துள்ளார்.

TNN 13 Mar 2017, 10:28 pm
சென்னை : அப்பல்லோ மருத்துவமனை இயக்குநர் பிரதாப் சி ரெட்டி மீது குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று திண்டுக்கல் வளரும் சமூக வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மாநில செயலாளர் செபாஸ்டின் புகார் மனு அளித்துள்ளார்.
Samayam Tamil to file criminal case against apollo reddy lawyer association
அப்பல்லோ இயக்குநர் ரெட்டி மீது குற்ற வழக்கு: வழக்கறிஞர் புகார்


ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக தொடர்ந்து கூறப்பட்டு வருகின்றது. இந்தநிலையில் திண்டுக்கல் வளரும் சமூக வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மாநில செயலாளர் செபாஸ்டின் இன்று திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் ஒரு புகார் மனு கொடுத்து உள்ளார்.

அந்த புகார் மனுவில் , " மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் 75 நாட்கள் சிகிச்சை பெற்றார். பின்னர் அவர் மரணமடைந்த நிலையில் அவர் உடல் மட்டுமே வெளியே கொண்டுவரப்பட்டது .அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகளில் பல்வேறு முரண்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுமக்களை ஏமாற்றும் செயல் ஆகும். எனவே அப்பல்லோ இயக்குனர் பிரதாப் சி ரெட்டி உள்பட அவருக்கு உடந்தையாக இருந்த மருத்துவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை மக்களிடம் விள்க்க வேண்டும் " என்று அதில் கூறியிருந்தார்.

to file criminal case against apollo reddy : lawyer association

அடுத்த செய்தி