ஆப்நகரம்

அரசு இ-சேவை மையங்களில் சேவை பெற மொபைல் எண் கட்டாயம்

அனைத்து அரசு இ-சேவை மையங்களிலும் மே 2-ம் தேதி முதல் மொபைல் எண் கட்டாயமாக்கப்படுகின்றது என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

TNN 27 Apr 2017, 8:41 pm
சென்னை : அனைத்து அரசு இ-சேவை மையங்களிலும் மே 2-ம் தேதி முதல் மொபைல் எண் கட்டாயமாக்கப்படுகின்றது என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil to get service from e savai maiyam mobile no mandatory
அரசு இ-சேவை மையங்களில் சேவை பெற மொபைல் எண் கட்டாயம்


இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், "அரசு இ-சேவை மையங்கள் வாயிலாக சேவைகளை பொதுமக்களுக்கு விரைவாக வழங்குவதற்கு வசதியாக அரசால் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக அனைத்து இ-சேவை மையங்களிலும் 2.5.2017 முதல் கைபேசி எண் கட்டாயமாக்கப்படுகின்றது.

முதன் முறையாக இ-சேவை மையத்திற்கு செல்பவர்கள், தங்களது கைபேசி எண்ணினை கணினி பொறுப்பாளர்களிடம் கொடுத்து, பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்த பின் தங்களது கைபேசிக்கு தாங்கள் விண்ணப்பித்த சேவைக்கான விண்ணப்ப எண் மற்றும் சேவைக் கட்டணம் குறித்த விவரங்கள் குறுஞ் செய்தியாக அனுப்பப்படும்.


விண்ணப்பத்தின் தற்போதைய நிலையினை அறிந்து கொள்ள 155250 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும் விண்ணப்பதாரர்களுக்கு தேவைப்படும் சந்தேகங்கள் மற்றும் விவரங்களை கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு ( 1800 425 1333) தொடர்பு கொண்டு தீர்வு பெற்று கொள்ளலாம்.

விண்ணப்பம் பரிசீலனை செய்யப்பட்டு, சான்றிதழ் தயாரானதும், பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும். அக்குறுஞ்செய்தி வாயிலாக, இணையம் வழியாக பொதுமக்கள் தங்களது சான்றிதழ்களைப் பார்வையிட இயலும்.எனவே, பொதுமக்கள் 2.5.2017 முதல் இ-சேவை மையங்களுக்கு செல்லும் பொழுது தவறாமல் தங்களது கைபேசி எண்ணை பதிவு செய்து மேற்கூறிய பயன்களை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். " என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி