ஆப்நகரம்

யாருக்கு ஆதரவு?- குழம்பித் தவிக்கும் தமிழகக் காவல்துறை!

சசிகலா அணியை ஆதரிப்பதா அல்லது ஓபிஎஸ் அணியை ஆதரிப்பதா என்ற குழப்பத்தில் தமிழகக் காவல்துறை சிக்கித் தவிக்கிறது.

TOI Contributor 9 Feb 2017, 11:47 am
சசிகலா அணியை ஆதரிப்பதா அல்லது ஓபிஎஸ் அணியை ஆதரிப்பதா என்ற குழப்பத்தில் தமிழகக் காவல்துறை சிக்கித் தவிக்கிறது.
Samayam Tamil to support ops or sasikala tamilnadu police in confusion
யாருக்கு ஆதரவு?- குழம்பித் தவிக்கும் தமிழகக் காவல்துறை!


பிரச்னையை தீர்க்கத்தான் எல்லாரும் போலீசாரின் உதவியை நாடுவார்கள். ஆனால், தமிழகத்தில் வித்தியாசமாக, கடந்த ஒரு வாரகாலமாக, போலீசார் இடையே பெரும் குழப்பம் நிலவுகிறது. ஆட்சி அதிகாரத்தில் யார் இருக்கிறார்கள் எனத் தெரியாமல், யாரை ஆதரிப்பது, யாருக்கு அதிக பாதுகாப்பு வழங்குவது என்ற குழப்பத்தில் தமிழக போலீசார் சிக்கித் தவிக்கின்றனர்.

மேலும், உயர் அதிகாரிகளைச் செயல்பட விடாமல், போயஸ் கார்டன் தரப்பு ஒருபுறம் நெருக்கடி கொடுப்பதாகக் கூறப்படுகிறது. மறுபுறம் பன்னீர்செல்வம் சார்ந்த உத்தரவுகளை ஏற்பதா, வேண்டாமா என்ற குழப்பமும் நாளுக்கு நாள் காவல்துறை அதிகாரிகளிடையே அதிகரித்து வருகிறது.

இந்த குழப்பத்தை தவிர்க்க, விரைவில் அரசியல் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என, தமிழக மக்கள் மட்டுமின்றி காவல்துறையினரும் எதிர்பார்த்துள்ளனர்.

To support OPS or Sasikala? Tamilnadu police in confusion.

அடுத்த செய்தி