ஆப்நகரம்

’இன்றைய தமிழகம்’ - பல்வேறு முக்கியச் செய்திகளின் தொகுப்பு...!

தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் பரபரப்பான விஷயங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இதனால் முக்கியச் செய்திகளுக்கு பஞ்சமில்லை. இன்றைய நாளின் பல்வேறு செய்திகளை இங்கே சுருக்கமாக காணலாம். தொடர்ந்து இணைந்திருங்கள் “சமயம் தமிழ்” உடன்...

Samayam Tamil 10 Jul 2020, 1:40 pm
கொரோனா தொற்று, ஊரடங்கு கட்டுப்பாடுகள், சாத்தான்குளம் வழக்கு விசாரணை, மழை நிலவரம், விருத்தாசலம் திமுக முன்னாள் எம்.எல்.ஏ மரணம் உள்ளிட்டவை தமிழகத்தின் முக்கியச் செய்திகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. இதேபோல் பல செய்திகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Samayam Tamil Sathankulam CBI Investigation


தமிழகத்தின் முக்கியச் செய்திகள்:

* கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவிற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

* நீலகிரி மாவட்டத்தில் அமையவுள்ள அரசு மருத்துக் கல்லூரிக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். ரூ.447.32 கோடி மதிப்பில் 40 ஏக்கர் பரப்பில் அரசு மருத்துவக்கல்லூரி அமையவுள்ளது.

* தந்தை, மகன் சித்ரவதைக்கு பயன்படுத்தப்பட்ட சாத்தான்குளம் காவல்நிலைய லத்தி, மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும் வழக்கு தொடர்பான ஆவணங்கள், தடயங்களும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.

* தேனி மாவட்டத்தில் மேலும் 102 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,489ஆக உயர்ந்துள்ளது.

* விருத்தாசலம் திமுக முன்னாள் எம்.எல்.ஏ(1996-2001) குழந்தை தமிழரசன் நேற்று காலமானார். இவர் திமுக பொதுக்குழு உறுப்பினர், தணிக்கை குழு உறுப்பினராக இருந்தவர். ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் கீழ் இரண்டு மாதங்களாக ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வந்தார். இவரது இறுதிச் சடங்கு இன்று காலை 10 மணிக்கு விருத்தாசலம் தெற்கு பெரியார் நகர் மகிழம் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிறது.

* தமிழகத்தில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்த சூழலில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 நிவாரணம் அறிவித்திருந்தது. இதனை வாங்குவதற்கு இன்றே கடைசி நாள் ஆகும். இன்று முதல் இலவச பொருட்கள் வினியோகம் தொடங்குகிறது.

* தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை - மகன் கஸ்டடி மரணத்தில் சிபிஐ விசாரணை இன்று தொடங்குகிறது. இதற்காக சிபிஐ கூடுதல் எஸ்.பி சுக்லா தலைமையில் 7 பேர் கொண்ட டெல்லியில் இருந்து இன்று தமிழகம் வருகின்றனர்.

அடுத்த செய்தி