ஆப்நகரம்

’இன்றைய தமிழகம்’ - பல்வேறு முக்கியச் செய்திகளின் தொகுப்பு...!

நாள்தோறும் பல்வேறு பரபரப்பான நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் தமிழக அளவிலான முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். தொடர்ந்து இணைந்திருங்கள் “சமயம் தமிழ்” உடன்...

Samayam Tamil 11 Aug 2020, 10:50 am
அதிகரிக்கும் கோவிட்-19 தொற்று, பிரதமர் உடன் ஆலோசனை, மேட்டூர் அணை நீர்மட்டம், காவிரி ஆற்றில் வெள்ளம், அம்மொனியம் நைட்ரேட் விவகாரம் உள்ளிட்டவை தமிழகத்தின் முக்கியச் செய்திகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. இதேபோல் மேலும் பல செய்திகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Samayam Tamil CM Palaniswami


தமிழகத்தின் முக்கியச் செய்திகள்:

* எடப்பாடியார் தான் என்றும் முதல்வர் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகையில், இலக்கை நிர்ணயித்துவிட்டு களத்தைச் சந்திப்போம். 2021ல் வெற்றி நமதே என்று குறிப்பிட்டுள்ளார்.

* திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளர் உள்பட மேலும் 4 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

* சென்னை காசிமேட்டில் இருந்து மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதில் கடலோர காவல்படையினர் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

* கேரள மாநிலம் மூணாறு நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை மீட்பதில் ஏன் தாமதம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது, விமான விபத்தில் நடந்த மீட்புப் பணிகளைப் போன்று இந்த விவகாரத்தில் அக்கறை காட்டப்படவில்லை என்றும், நிவாரணம் அளிக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? - லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!

* கன்னியாகுமரி மக்களவை எம்.பி வசந்தகுமார் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

* கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி உடன் இன்று காலை 10.30 மணிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடு பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார்.

* சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை நீர்மட்டம் 95.10 அடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்து 1.30 லட்சம் கன அடியில் இருந்து 80 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. நீர் இருப்பு தற்போது 58.67 டி.எம்.சியாக உள்ளது. பாசனத்திற்காக 10 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சபரிமலையில் பக்தர்களுக்கு அனுமதி, இந்த சான்று அவசியம்!

* சென்னை மணலி கிடங்கில் இருந்து மேலும் 229 டன் அம்மோனியம் நைட்ரேட் வேதிப்பொருள் ஐதராபாத்திற்கு 12 கண்டெய்னர்கள் மூலம் புறப்பட்டன.

* புதுக்கோட்டையில் புதிதாக 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அம்மாநிலத்தில் மொத்த பாதிப்பு 3,379ஆக அதிகரித்துள்ளது.

அடுத்த செய்தி