ஆப்நகரம்

’தமிழகம் இன்று’ - பல்வேறு முக்கியச் செய்திகள் உடனுக்குடன்...!

இன்றைய நாளில் தமிழகத்தில் நிகழும் மற்றும் நிகழ்ந்த முக்கியச் செய்திகள் பலவற்றின் தொகுப்பை இங்கே தெரிந்து கொள்ளலாம். இதற்காக தொடர்ந்து இணைந்திருங்கள் ’சமயம் தமிழ்’ உடன்...

Samayam Tamil 13 Jun 2020, 1:50 pm
தமிழகத்தில் பீலா ராஜேஷ் இடமாற்றம், அதிகரிக்கும் கொரோனா தொற்று, மழை பெய்வதற்கான சூழல், தொழில் தொடங்க நிறுவனங்களுக்கு முதலமைச்சர் விடுத்த அழைப்பு உள்ளிட்டவை முக்கியச் செய்திகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றன.
Samayam Tamil தலைப்புச் செய்திகள்


இன்றைய நாளின் முக்கிய செய்திகள்:

* மருத்துவ மேற்படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அதிமுக களமிறங்கியுள்ளது. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க...

* தமிழ்நாட்டில் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதால் ரூ.12.14 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை 4,66,666 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. 6,27,096 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளனர். 5,81,495 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* கோவை அரசு மருத்துவமனையில் 8 மாத ஆண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிறப்பு சான்றிதழ் வாங்குவதற்காக வந்த நிலையில் இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தையை பெண் ஒருவர் தூக்கிச் சென்றுள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் வாசிக்க...

* தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் திங்கள் அன்று ஆலோசனை நடத்துகிறார். இதில் வைரஸை கட்டுப்படுத்துவது, சுகாதார நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.

* தமிழக அரசு அலுவலகங்களில் கொரோனா நோய் தொற்றை தடுக்கும் வகையில் மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதேபோல் நாளையும் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கிருமி நாசினிகள் தெளிக்கப்பட உள்ளன.

* தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை காலம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது.

* சென்னையில் அதிகபட்ச கொரோனா பாதிப்பு காணப்படுகிறது. இதையொட்டி கூடுதலாக 112 ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாகனத்திலும் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு ஆய்வக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் இருப்பர். தேவையை பொறுத்து ஆம்புலன்ஸ் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி