தமிழகத்தின் முக்கியச் செய்திகள்:
* சாத்தான்குளம் தந்தை, மகன் சித்ரவதை கொலை வழக்கு தொடர்பாக மனித உரிமை ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
* மின்கட்டண உயர்வை கண்டித்து வரும் 21ஆம் தேதி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
* 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் திருப்பூர் மாவட்டம் 97.12 சதவீத தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்துள்ளது. இதையடுத்து ஈரோடு 96.99 சதவீதத்துடன் இரண்டாம் இடத்திலும், கோவை மாவட்டம் 96.39 சதவிதத்துடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
* 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் 92.3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள்: 94.80 சதவீதமும், மாணவர்கள்: 89.41 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
* தமிழகத்தில் இன்று 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. மாணவர்களின் கைப்பேசி எண்ணிற்கு மதிப்பெண் விவரம் குறுஞ்செய்தியாக அனுப்பிவைக்கப்படும் - தமிழக அரசு
* புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 825 ஆக அதிகரித்துள்ளது.
* விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் குழந்தை உள்பட 6 பேர் உயிரிழந்தனர். நெல்லையில் இருந்து சென்னைக்கு சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் ஓடையில் கவிழ்ந்தது.
* சென்னை மீனம்பாக்கம், கிண்டி, பெருங்களத்தூர், வண்டலூர் பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. ராமாபுரம், வளசரவாக்கம், விருகம்பாக்கம், போரூர், பம்மல், அனகாபுத்தூர், குன்றத்தூர், பூந்தமல்லி, காட்டுப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் இடி,மின்னலுடன் கனமழை பெய்துள்ளது.
* கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்பியதாக கறுப்பர் கூட்டம் சேனலை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமயம் தமிழ் டெலிகிராம் சேனலில் இணைய https://t.me/SamayamTamil_News என்ற லிங்கை கிளிக் செய்யவும்.