ஆப்நகரம்

‘தமிழ்நாடு இன்று’ - முக்கியச் செய்திகள் உடனுக்குடன்...!

தமிழகத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள் பலவற்றின் தொகுப்பை இங்கே சுருக்கமாக தெரிந்து கொள்ளலாம். தொடர்ந்து இணைந்திருங்கள் ’சமயம் தமிழ்’ உடன்...

Samayam Tamil 17 Jun 2020, 8:25 am
ஊரடங்கு நிவாரணத் தொகை, புதுச்சேரி மாநில எல்லைகள் மூடல், ஊரடங்குக்கு தயாராகும் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் உள்ளிட்டவை தமிழகத்தில் முக்கியச் செய்திகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. இதனுடன் மேலும் பல செய்திகளை இங்கே காணலாம்.
Samayam Tamil tamil nadu headlines today


தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள்:

*மேட்டூர் அணையின் நீர் மட்டம் 99.10 அடியாக உள்ளது. 63.68 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. அணைக்கு 2,233 கன அடி நீர்வரும் நிலையில் காவிரி டெல்டா பாசனத்திற்காக 10,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

*இந்தியா சீனா மோதலில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரி பழனி உயிரிழந்தார். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து என்பவரின் மகன் பழனி. இவர் கடந்த 22 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்தார்.

*புதுச்சேரிக்கு கடலூர் எல்லை வழியாக வாகனங்கள் செல்ல முயற்சிக்கின்றன. ஆனால் காவல் துறையினர் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இ பாஸ் காட்டினாலும் புதுச்சேரிப் பகுதிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரி எல்லையில் வாகனங்கள் அணி வகுத்து நிற்கின்றன.

*தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

*கொரோனா முழு ஊரடங்கு காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள் தவிர, மற்ற கீழமை நீதிமன்ற நீதிபதிகள் வரும் ஜுன் 30 வரை வீடுகளில் இருந்தே பணியாற்ற உயர் நீதிமன்ற நிர்வாகக்குழு அனுமதியளித்துள்ளது.

*ஜுன் 19ஆம் தேதி முதல் சென்னையில் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதால் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர். இதைத் தடுக்கும் விதமாக பிற மாவட்ட எல்லைகளில் காவல் துறையினர் குவிக்கப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி