ஆப்நகரம்

’இன்றைய தமிழகம்’ - பல்வேறு முக்கியச் செய்திகள் உடனுக்குடன்...!

தமிழக அளவில் இன்றைய நாளின் தலைப்புச் செய்திகளாக இடம்பெறுவனவற்றை இங்கே விரைவாக தெரிந்து கொள்ளலாம். இதற்காக தொடர்ந்து இணைந்திருங்கள் ’சமயம் தமிழ்’ உடன்...

Samayam Tamil 19 Jun 2020, 11:59 am
4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு, தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள், ஊர் பெயர்கள் மாற்றம் தொடர்பான அரசாணை வாபஸ், அம்மா உணவகங்களில் இலவச உணவு உள்ளிட்டவை முக்கியச் செய்திகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. இதேபோல் மேலும் பல செய்திகளை இங்கே காணலாம்.
Samayam Tamil முழு ஊரடங்கு அமல்


தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள்:

* பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக சார்பில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கிறார்.

* 10ஆம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்களில் குளறுபடி செய்யும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

* கொரோனாவிற்கு எதிரான போரில் தமிழக அரசு 2 வாரங்களில் வெற்றி பெறும் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

* சென்னையில் முழு ஊரடங்கை கண்காணிக்க 18 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொண்டார்.

* இன்று முதல் 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

* கொரோனா வைரஸ் பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்து வருவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

* முதலமைச்சர் அலுவலகத்தில் பணியாற்றும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் அலுவலக துணைச் செயலர், 2 அலுவலக உதவியாளர், ஒரு ஓட்டுநருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த செய்தி