ஆப்நகரம்

’இன்றைய தமிழகம்’ - பல்வேறு முக்கியச் செய்திகளின் தொகுப்பு...!

ஒவ்வொரு நாளும் பரபரப்பான விஷயங்கள் தமிழ்நாட்டில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இதனால் முக்கியச் செய்திகளுக்கு பஞ்சமில்லை. இன்றைய நாளின் பல்வேறு செய்திகளை இங்கே சுருக்கமாக காணலாம். தொடர்ந்து இணைந்திருங்கள் “சமயம் தமிழ்” உடன்...

Samayam Tamil 1 Jul 2020, 10:13 am
சாத்தான்குளம் விசாரணை தீவிரம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், மதுரையில் அதிகரிக்கும் கொரோனா, பரவலாக பெய்து வரும் மழை உள்ளிட்டவை தமிழகத்தின் முக்கியச் செய்திகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. இதுபற்றி மேலும் பல செய்திகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Samayam Tamil Tamil Nadu Secretariat


தமிழகத்தின் முக்கியச் செய்திகள்:

குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு, நம்பிக்கையளிக்கும் ரிப்போர்ட்!

* சாத்தான்குளம் தந்தை - மகன் சித்ரவதை மரணம் தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தடய அறிவியல் துறை நிபுணர்கள் 2வது நாளாக ஆய்வு செய்து வருகின்றனர்.

* கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் ஒரே நாளில் 19 செ.மீ மழை பெய்துள்ளது. இதுவே தமிழகத்தில் கடந்த ஒருமாத காலத்தில் ஒரே நாளில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு ஆகும்.

* மதுரையில் கொரோனா வைரஸ் தொற்று 100 நாட்களை நிறைவு செய்துள்ளது. தற்போது வரை 2,557 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 32 பேர் பலியாகியுள்ளனர்.

* வேலூர் மாவட்டத்தில் புதிதாக 76 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 1,553ஆக அதிகரித்துள்ளது.

சாத்தான் குளம் விவகாரம்: மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கை!

* சாத்தான்குளம் தந்தை - மகன் சித்ரவதை மரணம் தொடர்பாக புகாருக்குள்ளான எஸ்.ஐ.க்கள் கைது செய்யப்பட நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

* தமிழகத்தில் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 67,834 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 1,028 பேர் வைரஸால் கடந்த மாதம் பலியாகியுள்ளனர்.

அடுத்த செய்தி