ஆப்நகரம்

‘இன்றைய தமிழ்நாடு’ - முக்கியச் செய்திகள் உடனுக்குடன்...!

நாள்தோறும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் தமிழகம் இயங்கி வருகிறது. இதனால் தலைப்புச் செய்திகளுக்கு குறைவில்லை. இன்றைய நாளின் பல்வேறு செய்திகளை இங்கே சுருக்கமாக காணலாம். தொடர்ந்து இணைந்திருங்கள் “சமயம் தமிழ்” உடன்...

Samayam Tamil 27 Jun 2020, 12:22 pm
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு, பொது முடக்கம் நீட்டிக்கப்படுமா, கொரோனா அச்சத்தால் தனிமைப்படுத்திக் கொண்ட அமைச்சர் உள்ளிட்டவை முக்கியச் செய்திகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. இதேபோல் பல செய்திகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Samayam Tamil tamil nadu chennai live updates


தமிழகத்தின் இன்றைய முக்கியச் செய்திகள்:

*கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஊடகத் துறையைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர் குடும்பத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

*கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை புறக்கணிக்க கூடாது. சென்னையில் தினமும் 3500ஆக இருந்த கொரோனா சோதனை, 10000 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. மாஸ்க், கிருமி நாசினி பயன்படுத்துவது அவசியம்” என சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

*“தொற்று இருப்பவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள விரும்பினால் அனுமதி வழங்கப்படும்” என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் பேட்டியளித்துள்ளார்.

*தென்மேற்கு பருவக்காற்று, வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

*மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் மாநிலங்களில் ஜூலை 31ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் இங்கும் பொது முடக்கம் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து நாளை மறுதினம் மருத்துவக் குழுவுடன் ஆலோசணை நடத்தியபிறகு முடிவு செய்யப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

*சென்னை மற்றும் அதை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தாக்குதல் மையம் கொண்டிருந்த நிலையில் தற்போது மாநிலத்தின் பல இடங்களிலும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. மதுரை, வேலூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பாதிப்பு ஒரே நாளில் 100க்கு மேல் அதிகரித்துள்ளது.

*அமைச்சர் கே.பி.அன்பழகன், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அன்பழகனுடன், அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அவரது மகனும் முன்னாள் எம்.பி.யுமான ஜெயவர்தன் ஆகியோரும் உடனிருந்து பணியாற்றினர். அன்பழகனுடன் இருந்ததால் தானும், தனது மகனும் தனிமைப்படுத்திக் கொண்டதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

*சென்னை ஐஐடியில் உள்ள மாணவர்கள் விடுதியில் கொரோனா தடுப்பு மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி