ஆப்நகரம்

’இன்றைய தமிழ்நாடு’ - பல்வேறு முக்கியச் செய்திகளின் தொகுப்பு...!

ஒவ்வொரு நாளும் பரபரப்பான பல்வேறு விஷயங்கள் அரங்கேறி வருகின்றன. இதனால் தமிழகத்தில் முக்கியச் செய்திகளுக்கு பஞ்சமில்லை. இன்றைய நாளில் முக்கியத்துவம் பெறும் பல்வேறு செய்திகளை இங்கே காணலாம். தொடர்ந்து இணைந்திருங்கள் ‘சமயம் தமிழ்’ உடன்...

Samayam Tamil 29 Jul 2020, 10:42 am
ஜெயலலிதா இல்லத்தில் இருக்கும் பொருட்களின் பட்டியல், மாநிலம் முழுவதும் பரவலாக பெய்யும் கனமழை, ஆகஸ்ட் ஒன்றாம் தேதியில் இருந்து ஊரடங்கு தளர்வா? நீட்டிப்பா?, பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசப்பட்ட விவகாரத்தில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது உள்ளிட்டவை தமிழகத்தின் முக்கியச் செய்திகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. இதேபோல் மேலும் பல செய்திகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Samayam Tamil Edappadi Palaniswami


தமிழகத்தின் முக்கியச் செய்திகள்:

* கோவை சுந்தராபுரத்தில் பெரியார் சிலை மீது காவி சாயம் பூசியதாக கைது செய்யப்பட்ட பாரத் சேனா அமைப்பின் நிர்வாகி அருண்கிருஷ்ணன் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

* மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தில் அசையும், அசையா சொத்துகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதுதொடர்பாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 4 கிலோ தங்கம், 601 கிலோ வெள்ளி பொருட்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

சென்னை தவிர பிற இடங்களில் பொது போக்குவரத்தா? முதல்வர் ஆலோசனை!

* நேற்று இரவு முதல் தொடர் மழை பெய்து வருவதால் கீழடியில் அகழாய்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.

* சென்னை காசிமேடு மீன் சந்தையில் இன்று அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. அப்போது முகக் கவசம் அணிய வேண்டும் என்றும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று போலீசார் ஒலிபெருக்கில் எச்சரிக்கை விடுத்தனர்.

* வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு மாவட்டங்களில் இரவு முதல் நல்ல மழை கொட்டித் தீர்த்தது.

* வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் சென்னை காவல்துறைக்கு உட்பட்ட பகுதி மற்றும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளைத் தவிர்த்து மற்ற பகுதிகளில் அரசு பேருந்து சேவை 50 சதவீத இருக்கைகளுடன் மண்டலங்களுக்குள் மட்டும் தொடங்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் தமிழகம் வரும் வட மாநிலத் தொழிலாளர்கள்!

* தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பதா அல்லது தளர்த்துவா என்பது பற்றி அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் உடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். தற்போது ஜூலை 31ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கின்றன.

அடுத்த செய்தி