ஆப்நகரம்

’இன்றைய தமிழ்நாடு’ - பல்வேறு முக்கியச் செய்திகளின் தொகுப்பு...!

ஒவ்வொரு நாளும் பரபரப்புகளுக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமின்றி கடந்து போகின்றன. அந்த வகையில் இன்றைய நாளில் முக்கியத்துவம் பெறும் செய்திகளை இங்கே காணலாம். தொடர்ந்து இணைந்திருங்கள் “சமயம் தமிழ்” உடன்...

Samayam Tamil 2 Aug 2020, 11:33 am
முழு ஊரடங்கு, எல்லையில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர், கடலூரில் இருபிரிவினரிடையே மோதல், கொரோனா பாதிப்பு, ஆடிப் பெருக்கு உள்ளிட்டவை தமிழகத்தின் முக்கியச் செய்திகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. இதேபோல் மேலும் பல செய்திகளை இங்கே காணலாம்.
Samayam Tamil Tamil Nadu Breaking News


தமிழகத்தின் முக்கியச் செய்திகள்:

* வடக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 4ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளது. எனவே நாளை முதல் தென்மேற்கு பருவமழை மேலும் வலுவடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

தமிழரின் கலச்சாரத்தை மீட்டெடுத்த கொரோனா, நிலைமாறும் மக்கள்!

* நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கை அமலுக்கு வரவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் நாளை ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

* சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. முன்னதாக ஆளுநரின் உதவியாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் 7 நாட்கள் பன்வாரிலால் புரோஹித் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

* தீரன் சின்னமலை நினைவு தினத்தை ஒட்டி அவரது சிலைக்கு முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

இன்று முழு ஊரடங்கு - இந்த விஷயங்களை எல்லாம் மறந்திடாதீங்க தமிழக மக்களே!

* ஜம்மு காஷ்மீரில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் திருமூர்த்தியின் உடல், அவரது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் புள்ளவராயன் குடிக்காட்டில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அமைச்சர் காமராஜ், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

* புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் தந்தையின் இறுதிச் சடங்கில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளைஞரை முழு கவச உடை மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் கலந்து கொள்ள மருத்துவர்கள் அனுமதி அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

* கடலூர் மாவட்டம் குண்டு உப்பலபாடி கிராமத்தில் முன்விரோதம் காரணமாக நடந்த கொலை சம்பவம் மிகப்பெரிய வன்முறைக்கு வித்திட்டுள்ளது. இருதரப்பிற்கும் இடையே நடைபெற்ற மோதலில் படகுகள், இரு சக்கர வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டுள்ளது.

இங்கெல்லாம் கனமழை வெளுத்து வாங்கப் போகுது - தமிழகத்திற்கு வானிலை எச்சரிக்கை

* தமிழகத்தில் 23 டி.எஸ்.பிக்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான உத்தரவை டிஜிபி திரிபாதி வெளியிட்டுள்ளார்.

* தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. எனவே பால், மருந்தகங்கள், மருத்துவமனைகள் மட்டும் திறக்கப்படும். மற்ற அனைத்துக் கடைகளும் மூடப்பட்டிருக்கும்.

அடுத்த செய்தி