ஆப்நகரம்

’தமிழ்நாடு இன்று’ - பல்வேறு முக்கியச் செய்திகளின் தொகுப்பு...!

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் பரபரப்பான விஷயங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இதனால் முக்கியச் செய்திகளுக்கு ஒருபோதும் பஞ்சமில்லை. இன்றைய நாளின் பல்வேறு செய்திகளை இங்கே சுருக்கமாக காணலாம். தொடர்ந்து இணைந்திருங்கள் “சமயம் தமிழ்” உடன்...

Samayam Tamil 30 Jun 2020, 11:15 am
தூத்துக்குடி தந்தை - மகன் உயிரிழப்பில் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர், தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு, மதுரையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று உள்ளிட்டவை தமிழகத்தின் முக்கியச் செய்திகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. இவற்றுடன் மேலும் பல செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.
Samayam Tamil Tamil Nadu Breaking News


தமிழகத்தின் முக்கியச் செய்திகள்:

* தந்தை, மகன் உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக சாத்தான்குளம் காவல்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

* சாத்தான்குளம் காவல்நிலையத்தை வருவாய்த்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கையாக வட்டாட்சியர் செந்தூர்ராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாஜிஸ்திரேட் விசாரணைக்கு போலீஸ் ஒத்துழைப்பு தரவில்லை என்ற புகாரில் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

* தூத்துக்குடியில் தந்தை - மகன் உயிரிழந்த விவகாரத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் D.குமார் மற்றும் சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் C.பிரதாபன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நீதிபதியை தரக்குறைவாக பேசிய காவலர் மகாராஜன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக காவல் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

* தமிழகத்தில் வரும் ஜூலை 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. சென்னை காவல் எல்லை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஜூலை 5ஆம் தேதி வரை முழு ஊரடங்கு தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.

* சேலம் மாவட்டம் ஓமலூர் சுங்கச்சாவடி அருகே பட்டாலியன் போலீஸ் தேசிங்கை திமுக முன்னாள் எம்.பி அர்ஜூனன் எட்டி உதைத்த விவகாரத்தில் அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

* தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அடுத்த செய்தி