ஆப்நகரம்

’இன்றைய தமிழகம்’ - பல்வேறு முக்கியச் செய்திகளின் தொகுப்பு...!

தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் பரபரப்பான விஷயங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. எனவே முக்கியச் செய்திகளுக்கு இங்கு பஞ்சமில்லை. இன்றைய நாளின் பல்வேறு செய்திகளை இங்கே சுருக்கமாக காணலாம். தொடர்ந்து இணைந்திருங்கள் “சமயம் தமிழ்” உடன்...

Samayam Tamil 3 Jul 2020, 12:19 pm
சாத்தான்குளம் தந்தை - மகன் கஸ்டடி மரணத்தில் நீதிமன்ற விசாரணை, புதுக்கோட்டை சிறுமி பாலியல் கொலை, தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளிட்டவை முக்கியச் செய்திகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. இதேபோல் மேலும் பல செய்திகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Samayam Tamil Tamil Nadu Headlines


தமிழகத்தின் முக்கியச் செய்திகள்:

* தமிழக பாஜகவிற்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. திமுகவிலிருந்து விலகி பாஜகவுக்குச் சென்ற வி.பி.துரைசாமிக்கு மாநில துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

* குற்றவாளிகளை அதிமுக காப்பாற்றுகிறது என்று நாங்கள் சொன்னால் அரசியல் செய்கிறோம் என்கிறார்கள். இதற்கு எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர் கடம்பூர் ராஜுவும் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்' - எம்.பி கனிமொழி ட்விட்டர் பதிவு

* சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகாரிகள், கார் ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் அடங்குவர். இதையடுத்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

* தென்காசி அருகே கடையம் வனச்சரக பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த 9வது கரடியை வனத்துறை பிடித்துள்ளது. குறிப்பாக முதலியார்பட்டியில் பிடிக்கப்பட்ட 4வது கரடியாகும்.

* சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன் ஆகியோரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
* புதுக்கோட்டை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட செய்தி மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. இந்த கொடூர செயலுக்கு காரணமான குற்றவாளிகள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

* சென்னை போலீஸ் கமிஷ்னரிடம் வாட்ஸ்அப் காணொலி மூலம் புகார் தெரிவிக்க எண் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்களில் நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை 6369100100 என்ற வாட்ஸ் அப் எண்ணில் புகார் தெரிவித்து பயனடையலாம்.

அடுத்த செய்தி