ஆப்நகரம்

’இன்றைய தமிழ்நாடு’ - பல்வேறு முக்கியச் செய்திகளின் தொகுப்பு...!

ஒவ்வொரு நாளும் பரபரப்புகளுக்கு பஞ்சமின்றி சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்றைய முக்கியச் செய்திகளாக வலம் வருவன குறித்து காணலாம். தொடர்ந்து இணைந்திருங்கள் ‘சமயம் தமிழ்’ உடன்...

Samayam Tamil 4 Aug 2020, 10:58 am
கொட்டித் தீர்க்கும் கனமழை, கொரோனா வைரஸ் பாதிப்பு, புதிய கல்விக் கொள்கை சர்ச்சை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தென்மாவட்ட பயணம் உள்ளிட்டவை தமிழகத்தின் முக்கியச் செய்திகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. இதேபோல் மேலும் பல செய்திகளை இங்கே காணலாம்.
Samayam Tamil Tamil Nadu Breaking News


தமிழகத்தின் முக்கியச் செய்திகள்:

* தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

* நயினார் நாகேந்திரன் பாஜகவில் மன வருத்தத்தில் இருப்பதாக நேற்று தகவல் வெளியானது. இந்த சூழலில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முக்கிய கருத்தை தெரிவித்துள்ளார். அதாவது, நயினார் நாகேந்திரன் அதிமுகவின் ஆரம்பகால தொண்டர். அவர் மீண்டும் அதிமுகவில் சேர விரும்பினால் தொண்டர்கள் அவரை ஏற்றுக் கொள்வார்கள் என்று கூறியுள்ளார்.

புதிய கல்விக் கொள்கை குறித்து ஜி.கே.வாசன் என்ன சொல்கிறார்?

* சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 அதிகரித்துள்ளது. இதன்மூலம் ஒரு சவரன் ரூ.41,664க்கு விற்கப்படுகிறது.

* சென்னையில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி குறைவான விருந்தினர்களைக் கொண்டு நிகழ்ச்சிகளை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் நேற்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதேசமயம் ஆளுநர் மாளிகையில் சுதந்திர தின நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

* தெற்கு ஆந்திரா மற்றும் தெற்கு கர்நாடக பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் 16 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* உலகளவில் சிசிடிவி கேமராக்களை அதிகம் பயன்படுத்தும் நகரங்களில் சென்னை 21வது இடத்தைப் பிடித்துள்ளது.

கொரொனா: தமிழ்நாட்டின் தற்போதைய நிலவரம் இதுதான்!

* மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் நொய்யல் ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

* நீலகிரியில் பெய்த கனமழை காரணமாக காலம்புழா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி