அதிகரிக்கும் கொரோனா தொற்று, ஊரடங்கு கட்டுப்பாடுகள், சசிகலா எப்போது விடுதலை, சூடுபிடிக்கும் சாத்தான்குளம் விசாரணை உள்ளிட்டவை தமிழகத்தின் முக்கியச் செய்திகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. இவற்றுடன் மேலும் பல செய்திகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
தமிழகத்தின் முக்கியச் செய்திகள்:
* கடலூர் என்.எல்.சி பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிரந்தர ஊழியர் வைத்தியநாதன் இன்று காலை உயிரிழந்தார்.
* தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸிடம் சிபிசிஐடி இன்று விசாரணை நடத்துகின்றனர்.
* சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு முடிந்ததால் இன்று முதல் மாலை 4 மணி வரை வங்கிகள் வழக்கம் போல் செயல்படும்.
* சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் முழு ஊரடங்கு அமலில் இருந்தன. இந்நிலையில் இன்று முதல் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
* சசிகலா விரைவில் சிறையில் இருந்து வெளிவர இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த சூழலில் சாத்தான்குளம் விவகாரம் முதலமைச்சர் பழனிசாமியின் பதவிக்கு எத்தகைய ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும், இதன் பின்னணியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எவ்வாறு வந்தார் என்று சமயம தமிழ் எக்ஸ்குளுசீவ் செய்தியின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள். முழு விவரங்களுக்கு...
* தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,11,151 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 62,778 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மேலும் 1,713 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
* ஆம்பூர் அடுத்த பொன்னப்பள்ளி கிராமத்தில் மழையால் சேதமடைந்த தடுப்பணையை பார்வையிட திமுக எம்.எல்.ஏ விஸ்வநாதன் கடந்த 30ஆம் தேதி சென்றுள்ளார். அப்போது பாதை சேறும், சகதியுமாக இருந்தால் தனது செருப்பை கழற்றிவிட்டு நடந்தார். இந்த சூழலில் எம்.எல்.ஏவின் செருப்பை தலித் சமூக நிர்வாகியும், வெங்கடசமுத்திரம் ஊராட்சி திமுக செயலாளருமான சங்கர் கையில் எடுத்துச் சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
* இந்தியாவில் கோவாக்சின் என்ற கொரோனா தடுப்பூசி வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சந்தையில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு வாய்ப்பில்லை. இதுவொரு வதந்தியே என்று சமயம் தமிழுக்கு பிரத்யேகமாக மத்திய அரசின் விஞ்ஞானி டி.வி.வெங்கடேஸ்வரன் விளக்கம் அளித்துள்ளார். முழு விவரத்திற்கு...
* விரைவில் அமையவுள்ள திமுக ஆட்சியில் தகுதியற்றவர்களின் தகுதி தீர்மானிக்கப்படும். என் தகுதி பற்றி அமைச்சர் உதயகுமார் பேசுவது வேடிக்கையாகவும், விந்தையாகவும் உள்ளது - ஆ.ராசா
தமிழகத்தின் முக்கியச் செய்திகள்:
* கடலூர் என்.எல்.சி பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிரந்தர ஊழியர் வைத்தியநாதன் இன்று காலை உயிரிழந்தார்.
* தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸிடம் சிபிசிஐடி இன்று விசாரணை நடத்துகின்றனர்.
* சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு முடிந்ததால் இன்று முதல் மாலை 4 மணி வரை வங்கிகள் வழக்கம் போல் செயல்படும்.
* சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் முழு ஊரடங்கு அமலில் இருந்தன. இந்நிலையில் இன்று முதல் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
* சசிகலா விரைவில் சிறையில் இருந்து வெளிவர இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த சூழலில் சாத்தான்குளம் விவகாரம் முதலமைச்சர் பழனிசாமியின் பதவிக்கு எத்தகைய ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும், இதன் பின்னணியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எவ்வாறு வந்தார் என்று சமயம தமிழ் எக்ஸ்குளுசீவ் செய்தியின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள். முழு விவரங்களுக்கு...
* தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,11,151 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 62,778 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மேலும் 1,713 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
* ஆம்பூர் அடுத்த பொன்னப்பள்ளி கிராமத்தில் மழையால் சேதமடைந்த தடுப்பணையை பார்வையிட திமுக எம்.எல்.ஏ விஸ்வநாதன் கடந்த 30ஆம் தேதி சென்றுள்ளார். அப்போது பாதை சேறும், சகதியுமாக இருந்தால் தனது செருப்பை கழற்றிவிட்டு நடந்தார். இந்த சூழலில் எம்.எல்.ஏவின் செருப்பை தலித் சமூக நிர்வாகியும், வெங்கடசமுத்திரம் ஊராட்சி திமுக செயலாளருமான சங்கர் கையில் எடுத்துச் சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
* இந்தியாவில் கோவாக்சின் என்ற கொரோனா தடுப்பூசி வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சந்தையில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு வாய்ப்பில்லை. இதுவொரு வதந்தியே என்று சமயம் தமிழுக்கு பிரத்யேகமாக மத்திய அரசின் விஞ்ஞானி டி.வி.வெங்கடேஸ்வரன் விளக்கம் அளித்துள்ளார். முழு விவரத்திற்கு...
* விரைவில் அமையவுள்ள திமுக ஆட்சியில் தகுதியற்றவர்களின் தகுதி தீர்மானிக்கப்படும். என் தகுதி பற்றி அமைச்சர் உதயகுமார் பேசுவது வேடிக்கையாகவும், விந்தையாகவும் உள்ளது - ஆ.ராசா