ஆப்நகரம்

’இன்றைய தமிழகம்’ - பல்வேறு முக்கியச் செய்திகளின் தொகுப்பு...!

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் பரபரப்பான விஷயங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் சில முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். தொடர்ந்து இணைந்திருங்கள் “சமயம் தமிழ்” உடன்...

Samayam Tamil 7 Aug 2020, 10:33 am
பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை, கருணாநிதியின் நினைவு தினம், கொரோனா தொற்று, ஆன்லைன் வகுப்புகள் உள்ளிட்டவை தமிழகத்தின் முக்கியச் செய்திகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. இதேபோல் மேலும் பல செய்திகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Samayam Tamil Tamil Nadu Headlines Today


தமிழகத்தின் முக்கியச் செய்திகள்:

* நெல்லை மாவட்டத்தில் ரூ.196.75 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இதேபோல் தென்காசி மாவட்டத்திற்கான ரூ.78.77 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களையும் திறந்துவைத்தார்.

* தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் பொறியியல் கல்லூரிகளுக்கான ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதாவது முதலாமாண்டு மாணவர்களைத் தவிர மற்ற இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படவுள்ளது.

கொரோனா: தமிழ்நாட்டின் இன்றைய நிலவரம் இதுதான்!

* வேலூரில் புதிதாக 180 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 7,184 ஆக அதிகரித்துள்ளது.

* நீலகிரியில் கடந்த நான்கு நாட்களாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது. கூடலூரில் ஏராளமான வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது. இதையடுத்து அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

* முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

கலைஞர் நினைவு தினம்: இணையவழி மாரத்தான் போட்டி தொடக்கம்!

* சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 30 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 65.55 அடியாகவும், நீர் இருப்பு 28.99 டி.எம்.சியாகவும் இருக்கிறது.

* கோவை தடாகம் அருகே இளைஞர்கள் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்திற்குள்ளானது. இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

* இலங்கை தாதா அங்கொட லொக்கா தமிழகத்தில் பயன்படுத்திய போலி ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை சிபிசிஐடி அதிகாரிகள் மதுரையில் நடத்திய சோதனையின் போது பறிமுதல் செய்துள்ளனர்.

அடுத்த செய்தி