ஆப்நகரம்

இன்றைய தமிழ்நாடு: பல்வேறு முக்கியச் செய்திகளின் தொகுப்பு...!

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் பரபரப்பான விஷயங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் சில முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். தொடர்ந்து இணைந்திருங்கள் “சமயம் தமிழ்” உடன்...

Samayam Tamil 8 Aug 2020, 10:21 am
பொதுமுடக்கத்தில் அறிவிக்கப்பட்ட தளர்வுகள், பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை, அணைகள் நீர்மட்டம் உயர்வு, சென்னையில் அமோனியம் நைட்ரேட், கொரோனா தொற்று உள்ளிட்டவை தமிழகத்தின் முக்கியச் செய்திகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. இதேபோல் மேலும் பல செய்திகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Samayam Tamil breaking


தமிழகத்தின் முக்கியச் செய்திகள்:

*தமிழ்நாட்டில் மாநகராட்சிப் பகுதிகளில் சிறிய கோயில்கள், தேவாலயங்கள், வழிபாட்டுத் தலங்கள் ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

*தமிழ்நாடு அரசு அறிவித்த அடுத்தகட்ட தளர்வு அறிவிப்பில் தமிழ்நாடு முழுவதும் ஓட்டுநர் பயிற்சி மையங்கள் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

*மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 45000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் நேற்று ஒரே நாளில் அணை நீர்மட்டம் 5 அடி உயர்ந்தது. மேலும் பவானி சாகர் அணை 100 அடியை எட்டியுள்ளது. சோலையாறு அணை நிரம்பி உபரி நீர் திறந்துவிடப்படுகிறது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

*மணலி கிடங்கில் வைக்கப்பட்ட 690 டன் அமோனியம் நைட்ரேட் ராணுவ கிடங்குக்கு மாற்றம் செய்யப்படவுள்ளது. சுங்கத்துறை அதிகாரிகளுடன் காவல்துறை உயர் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி