ஆப்நகரம்

இன்று காலை 11 மணிக்கு குளோபல் மருத்துவமனைக்கு செல்லும் சசிகலா!

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் இருந்த சசிகலா, உடல் நலம் பாதிக்கப்பட்ட கணவரை சந்திப்பதற்காக 5 நாட்கள் பரோலில் வந்துள்ளார்.

TNN 7 Oct 2017, 7:33 am
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் இருந்த சசிகலா, உடல் நலம் பாதிக்கப்பட்ட கணவரை சந்திப்பதற்காக 5 நாட்கள் பரோலில் வந்துள்ளார். நேற்று மாலை சென்னை வந்தடைந்த சசிகலா தியாகராய நகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியாவின் வீட்டுக்கு வந்தடைந்தார்.
Samayam Tamil today at 11 am sasikala will meet natarajan in global hospital says ttv dinakaran
இன்று காலை 11 மணிக்கு குளோபல் மருத்துவமனைக்கு செல்லும் சசிகலா!


கிட்டத்தட்ட 233 நாட்கள் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் சிறை தண்டனை பெற்று வந்த சசிகலா தற்போது தமிழகம் வந்துள்ளார். அவரைக் காண தியாகராய நகரில் அவரது அதிமுக தொண்டர்கள் குவிந்தனர். சசிகலா சென்னை வந்ததையடுத்து செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் கூறுகையில், சசிகலா போயஸ் கார்டனில் கூட தங்கிக் கொள்ளலாம் என்று கர்நாடக சிறைத்துறை அனுமதித்தது. திறமையில்லாத இந்த ஆட்சி விரைவில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும். தமிழக அரசின் நிபந்தனைகளால் 5 நாட்கள் பரோலில் வந்துள்ள சசிகலா இன்று காலை 11 மணிக்கு குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடராஜனை பார்க்கச் செல்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி