ஆப்நகரம்

ஏப்ரல் 04: தமிழ்நாடு கொரோனா நிலவரம்..!

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு, இறப்பு, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை

Samayam Tamil 4 Apr 2021, 9:55 pm
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,581 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றுடன் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,99,807 ஆக அதிகரித்துள்ளது. இது நீங்கலாக இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களில் மொத்தம் 37 பேருக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 20 பேருக்கும் உருமாறிய வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil file pic


தமிழகத்தில் தற்போது 21,958 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 1344 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 253760 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 241246 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 4268 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவையில் இன்று 315 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 60153 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 57266 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 694 பேர் பலியாகியுள்ளனர்.

செங்கல்பட்டில் இன்று 297 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 57509 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 54499 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 827 பேர் பலியாகியுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 82,187 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 1,96,06,156 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இன்று 1,813 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் இதுவரை குணமானோர்களின் எண்ணிக்கை 8,65,071 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 14 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 12,778 ஆக உயர்ந்துள்ளது.

அடுத்த செய்தி