ஆப்நகரம்

சென்னை, கோவையில் அதிகரிக்கும் கொரோனா..! 34 பேர் இன்று உயிரிழப்பு

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் மாவட்டம் வாரியாக காண்போம்

Samayam Tamil 13 Aug 2021, 9:19 pm
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,933 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றுடன் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,84,969 ஆக அதிகரித்துள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்


தமிழகத்தில் தற்போது 20,411 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 211 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 5,40,739 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 5,30,289 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 8,352 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவையில் இன்று 236 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,2351 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 2,27,781 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2,212
பேர் பலியாகியுள்ளனர்.

பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - தமிழக அரசு அசத்தல்!

செங்கல்பட்டில் இன்று 108 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,63,491 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1,59,908 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2,414 பேர் பலியாகியுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,58,935 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 3,86,03,938 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் இன்று 1,887 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் இதுவரை குணமானோர்களின் எண்ணிக்கை 25,30,096 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 34 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 34,462ஆக உயர்ந்துள்ளது.

அடுத்த செய்தி