ஆப்நகரம்

உள்ளாட்சித் தேர்தல்: இன்று பிரச்சாரம் ஓய்கிறது!

இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைய உள்ளது.

Samayam Tamil 28 Dec 2019, 8:18 am
ஊரக உள்ளாட்சித் தேர்தல் 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. நேற்று நடைபெற்ற முதல் கட்டத் தேர்தலில் 76.19 % வாக்குகள் பதிவாகியுள்ளதாக என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil உள்ளாட்சித் தேர்தல்  இன்று பிரச்சாரம் ஓய்கிறது


இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நாளை மறுநாள் (டிசம்பர் 30) நடைபெறவுள்ளது. இதற்கான பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள், தொண்டர்கள் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.

சுயேட்சை வேட்பாளர்களும் பொதுமக்களை ஈர்க்கும் வகையில் வித்தியாசமான முறைகளில் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர். மூன்று ஆண்டுகளுக்கு மேலாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாததால் அடிப்படை வசதிகள் பல இடங்களில் சீர்குலைந்துள்ளது. இந்நிலையில் தற்போது நடைபெறும் தேர்தலில் வேட்பாளர்கள் கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதாக வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றனர்.

உள்ளாட்சித் தேர்தல்: வாக்குச்சாவடியில் 'குடிமகன்' செய்த 'தரமான சம்பவம்'!!

இரண்டாம்கட்ட தேர்தல் வரும் 30ஆம் தேதி நடைபெறவுள்ளதால் இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது. அதன்பிறகு குறிப்பிட்ட பகுதியில் வாக்காளர்களாக இல்லாதவர்கள், வெளியூரில் இருந்து வந்த அரசியல் கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் என அனைவரும் அங்கிருந்து வெளியேற வேண்டும்.

ஆணவத்தைத் தேர்தலில் வெளிப்படுத்திய ஊர் மக்கள்(வீடியோ)!

இல்லையெனில் சம்பந்தப்பட்டவர்கள் மீது தேர்தல் நடத்தை விதிகளின் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 Memories: அதிமுக, திமுக - ஏற்றமும் இறக்கமும்!

இரண்டு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி 2ஆம் தேதி எண்ணப்படவுள்ளன. இதையடுத்து மறைமுகத் தேர்தல் கூட்ட நாள் வரும் ஜனவரி 11ஆம் தேதி நடக்கிறது.

அடுத்த செய்தி