ஆப்நகரம்

உள்ளாட்சித் தேர்தல்: வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு

இன்று மாலையுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெறுகிறது. நாளை வேட்பு மனு பரிசீலனை நடைபெறும்.

Samayam Tamil 16 Dec 2019, 8:30 am
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் 3 ஆண்டுகளுக்குப் பிறகு (2016ஆம் ஆண்டு நடத்தப்பட்டிருக்க வேண்டிய தேர்தல்) தற்போது நடைபெற உள்ளது. எதிர்வரும் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய இரு தேதிகளில் இரண்டு கட்டமாக ஊரகப் பகுதிகளுக்காக தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
Samayam Tamil EC


இதனையடுத்து, அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் பலரும் ஆர்வமுடன் மனுத்தாக்கல் செய்து வந்தனர். கடந்த 12 ஆம் தேதி முதல் இன்று (டிச 16) ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவித்திருந்தது.

அவ்வகையில் இன்று மாலையுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு பெறுகிறது. நாளை வேட்பு மனு பரிசீலனை நடைபெறும்.

இதுவரையில், சுமார் ஒரு லட்சத்து 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் தனது வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே மூன்று கட்டமாக ஏற்கனவே அறிவித்து உள்ளது.

திமுக சமீபத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை முதற்கட்டமாக அறிவித்தது.

அடுத்த செய்தி