ஆப்நகரம்

ஸ்மார்ட் ரேசன் கார்டு : இன்று முதல் இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்

அரசு இ-சேவை மையங்கள் மூலம் புதியதாக ஸ்மார்ட் ரேசன் கார்டு பெற விண்ணப்பித்தல், ஸ்மார்ட் ரேசன் கார்டில் தேவையான விவரங்களை திருத்தம் செய்யும் வசதியை இன்று முதல் மேற்கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Samayam Tamil 24 Apr 2017, 4:54 pm
அரசு இ-சேவை மையங்கள் மூலம் புதியதாக ஸ்மார்ட் ரேசன் கார்டு பெற விண்ணப்பித்தல், ஸ்மார்ட் ரேசன் கார்டில் தேவையான விவரங்களை திருத்தம் செய்யும் வசதியை இன்று முதல் மேற்கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Samayam Tamil today onwards smart ration card related service started on arasu e sevai maiyam
ஸ்மார்ட் ரேசன் கார்டு : இன்று முதல் இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்


தமிழகத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான அரசு இ-சேவை மையங்கள்தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகின்றன.இச்சேவை மையங்கள் மூலம், வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு அரசு சேவைகள் வழங்கப்படுகிறது.

இந்தநிலையில் அரசு இ-சேவை மையங்கள் வாயிலாக புதியதாக குடும்ப அட்டை பெற விண்ணப்பித்தல், முகவரி மாற்றம் செய்தல், பெயர் நீக்கம், கைபேசி எண் மாற்றம் செய்தல் போன்ற குடும்ப அட்டை சேவை தொடர்பான வசதிகள் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அரசு அலுவலங்கங்களில் கூட்டத்தை தவிர்க்க அரசு இ-சேவை மையங்களில் புதிதாக ஸ்மார்ட் ரேசன் கார்டுகளைப் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களை எடுத்துச் சென்றால், ஒரு மணி நேரத்திற்குள் ஸ்மார்ட் ரேசன் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

today onwards smart ration card related service started on arasu E-sevai maiyam

அடுத்த செய்தி