ஆப்நகரம்

பரபரப்பான சூழலில் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைத் தொடர்ந்து பரபரப்பான சூழலில் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது.

Samayam Tamil 29 May 2018, 8:17 am

ஹைலைட்ஸ்:

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைத் தொடர்ந்து பரபரப்பான சூழலில் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil meet
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைத் தொடர்ந்து பரபரப்பான சூழலில் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை 10.30 மணிக்கு கூடுகிறது. தூத்துக்குடி துப்பாக்கிசூடு தாக்குதலைக் கண்டித்து, எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக பாதுகாப்பு கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 22ம் தேதி வரை பட்ஜெட் விவாதம் நடந்தது. இந்த நிலையில், மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தவும், துறை ரீதியிலான நிதி ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் பெறவும், இன்று காலை 10.30 மணிக்கு சட்டசபை கூட்டத்தொடர் கூடுகிறது. இன்று கூடும் இந்த சட்டசபை கூட்டத்தொடர் வரும் ஜூலை 9ம் தேதி வரை நடைபெறுகிறது.

சட்டசபை கூட்டத்தின் போது, தூத்துக்குடி பிரச்சனையை மையப்படுத்தி எதிர்க்கட்சிகள் பிரச்சனை எழுப்ப வாய்ப்புள்ளது. சபாநாயகர் பேசுவதற்கு அனுமதி அளிக்காவிட்டால், எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள், போராட்டம் நடத்த வாய்ப்புள்ளது. இதன் காரணமாக பாதுகாப்பிற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்றைய கூட்டத்தொடரின் போது வனத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை, மானிய கோரிக்கை மீது ஆகியவை தொடர்பாக விவாதம் நடைபெற உள்ளது. இதற்கு, அமைச்சர்கள் சீனிவாசன், மணிகண்டன் ஆகியோர் பதிலளித்து துறையின் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி