ஆப்நகரம்

3 நாள் சுத்தி சுத்தி அடிக்கப் போகுது மழை!

தமிழ்நாட்டில் பரவலாகக் கனமழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 28 Nov 2019, 1:11 pm
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை சரியான நேரத்தில் தொடங்கியது. வடகிழக்கு பருவ மழை தொடங்கியபோது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பரவலாக நல்ல மழை பதிவானது. அதன்பின் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் நல்ல மழை பதிவானது.
Samayam Tamil chennai_rains1_4649_356


வடகிழக்கு பருவ மழை தொடங்கிய இடைப்பட்ட காலத்தில் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் குறைவான மழைப் பொழிவே பதிவானது. எனினும், இப்போது சமீப நாட்களாகச் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு நேரத்தில் நல்ல மழை பெய்தது. குறிப்பாக நேற்று இரவு கனமழை பதிவானது. கனமழையால் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.

Chennai Rains: பல மாவட்டங்களில் இரவில் வெளுத்துக் கட்டிய மழை; சென்னையில் படுஜோர்!

இந்நிலையில், அடுத்து வரும் நாட்களில் பதிவாகவிருக்கும் மழைப் பொழிவு குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது புவியரசன் கூறியதாவது:
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நவ. 30ஆம் தேதி முதல் டிச. 2ஆம் தேதி வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சிக் காரணமாக பெரும்பாலான இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதே நேரத்தில், கடலோர மாவட்டங்கள், உள்வட்டங்கள் ஒரு சில இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் மிகக் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப் பொழிவைப் பொறுத்தவரைத் தாம்பரத்தில் 15 செமீ, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டானில் 10 செமீ, நாகப்பட்டினம் சீர்காழியில் 7 செமீ மழையும் பதிவாகியுள்ளது.

சென்னை புறநகர் பகுதியில் வெள்ளம்!

அடுத்த 24 மணி நேரத்திற்கு இலங்கையின் தெற்குக் கடல் பகுதியில் சூறாவளிக் காற்று வீசும். இதனால், மீனவர்கள் யாரும் இன்று ஒருநாள் அந்த கடற்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த செய்தி