ஆப்நகரம்

​ விவசாய சங்க கூட்டியக்கம் சார்பில் தமிழகத்தில் நாளை முழு அடைப்பு

கர்நாடக அரசை கண்டித்து நாளை தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்த போவதாக விவசாய சங்க கூட்டியக்கம் அறிவித்துள்ளது.

TNN 14 Sep 2016, 12:15 am
நாகப்பட்டினம்: கர்நாடக அரசை கண்டித்து நாளை தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்த போவதாக விவசாய சங்க கூட்டியக்கம் அறிவித்துள்ளது.
Samayam Tamil tomorrow complete banth in the state on behalf of the agricultural association
​ விவசாய சங்க கூட்டியக்கம் சார்பில் தமிழகத்தில் நாளை முழு அடைப்பு


இதுகுறித்து விவசாய சங்க கூட்டியக்கத்தின் துணைத் தலைவர் தனபாலன் செய்தியாளர்களிடம் கூறும்போர்து " காவிரியில் தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை தர மறுக்கும் கர்நாடக அரசு அங்கு வாழும் அப்பாவி தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தியும், சொத்துக்களை சேதப்படுத்தியும், தமிழக லாரிகள் மற்றும் தனியார் பேருந்துகளுக்கு தீ வைத்து அசம்பாவித சம்பவங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

கர்நாடகாவில் வாழும் தமிழர்களுக்கும், தமிழர்களின் சொத்துக்கும் பாதுகாப்பு வழங்கக்கோரி வரும் வியாழக்கிழமை தமிழகத்தில் விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கங்களில் இணைந்துள்ள 94 விவசாய சங்கங்களும் சாலை மறியல், ரயில் மறியல், கடையடைப்பு உள்ளிட்ட முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபடுகிறது. இதற்கு அதிமுக உள்ளிட்ட அனைத்துக்கட்சிகள், இதர சங்கங்கள் ஆதரவு தர வேண்டும் " என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அடுத்த செய்தி